இந்தியாவின் அதிக மக் கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள மதரசாக்களில் கணிதம், அறி வியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் 21,000 ஆசிரியர் களுக்கு ஊதியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாங் கள் வேலையை இழக்க உள்ள தாகவும் உத்தரப்பிரதேசத்தின் மதரஸா கல்வி வாரியத் தலை வர் இப்திகார் அஹமது ஜாவேத், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தி டம் தெரிவித்தார். இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரான முஸ்லிம் கள் 14 சதவீதம் உள்ளனர். உத்த ரப்பிரதேச மக்கள் தொகையில் இவர்கள் ஐந்தில் ஒரு பகுதி யினர். மோடி தலைமையிலான பாஜக அரசும், அதன் துணை அமைப்புகளும் முஸ்லிம் மற் றும் பிற மதச் சிறுபான்மையி னரை அச்சுறுத்தி துன்புறுத்தி வருவதாக மனித உரிமை கண் காணிப்பு அமைப்புகள் தொட ர்ந்து கூறிவருகின்றன. ஆனால், பாஜக இந்தக் குற்றச்சாட்டை இன்றைக்கும் மறுத்து வருகி றது. ஒன்றிய அரசு 2022-ஆம் மார்ச் மாதம் முதல் மதரசாக்க ளில் தரமான கல்வியை வழங்கு வதற்கான திட்டத்திற்கு நிதி யளிப்பதை நிறுத்தியது. நிதி யளிப்பதை நிறுத்துவதற்கான காரணம் ஏதும் அரசால் தெரி விக்கப்படவில்லை. ஒன்றிய அரசு, 2022-ஆம் ஆண்டு அக்டோபரில்தான் திட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து மாநிலங்க ளுக்கு தெரிவித்தது என்பதைச் சுட்டிக்காட்டி இப்திகார் அஹ மது ஜாவேத், கடந்த சில தினங்க ளுக்கு முன் கடிதம் எழுதியுள் ளார். பிரதமர் மோடி, இஸ்லாமிய சமூகத்தினரின் குழந்தைகள் நவீன கல்வியை பெறவிரும்புவ தாகக் கூறினார் எனக் குறிபிட்ட இப்திகார் அஹமது ஜாவேத், மதரசாக்களை மூடக்கூடாது என் பதற்காக தாம் அதிகாரிகளுடன் பேசி வருவதாகக் கூறியதோடு, உத்தரப்பிரதேச அரசு கடந்த ஏப்ரல் முதல் மதரசாவில் பணி யாற்றும் ஆசிரியர் களுக்கு சம்ப ளமாக வழங்க வேண்டிய தனது பங்குத் தொகையைச் செலுத்த வில்லை என்றும் ஜனவரி மாதத்தில் முழுஊதியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக வும் கூறினார்.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி மற்றும் ஆங்கி லம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அரசு ரூ.12,000, மாநில அரசு தனது பட்ஜெட்டிலிருந்து ரூ.3,000 வழங்கிவந்தது. இதுகுறித்துப் பேசிய பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த மதரசா ஆசிரியர் சமி யுல்லா கான். “கடந்த 14 ஆண்டு களாக என் பணி இது தான். தற்போது எனக்கு வயதாகிவிட் டது. இனி நான் எந்த வேலைக் குச் செல்ல முடியும்” என்று கேட்டார். மற்றொருபுறத்தில் அசாம் மாநில அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் குழுக்களின் எதிர்ப்பையும் மீறி, நூற்றுக்க ணக்கான மதரசாக்களை வழக்க மான பள்ளிகளாக மாற்று கிறது. மதரசாக்களுக்கு நிதி யளிப்பதை அனைத்து மாநி லங்களும் நிறுத்த வேண்டும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா கூறி யுள்ளார். இந்தியாவில் உள்ள பல மதரசாக்கள் முஸ்லிம் மக்க ளின் நன்கொடைகளை நம்பி யுள்ளன. மற்றவை அரசாங்கத் தின் உதவியை நம்பியே உள் ளன.