சென்னை, செப். 27- தொகுதி மறுவரையறை செய்தால் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை (செப்.27) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “ திமுக கூட்டணி எந்தச் சலசலப்பும் இல்லை. அமைதி யாக நீரோடைப் போல சென்று கொண்டி ருக்கிறது” என்றார். அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது உண்மையா அல்லது நாடகமா? என்பது காலப்போக்கில் தான் தெரியும் என்றும் அவர் கூறினார். தொகுதி மறுவரையறை செய்தால் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். 8 எம்பிக்கள் குறையலாம். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில ங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். இது இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோதமாகும். இந்தியா என்கிற ஓர் அமைப்பு, ஒரு நாடு என்ற எண்ணமே போய்விடும் என்று அவர் தெரி வித்தார்.