புதுதில்லி, நவ. 19 - மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக் கும், ஜார்க்கண்ட்டில் 38 தொகுதி களுக்கும் புதனன்று (நவ.20) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 64.86 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மகாராஷ்டிராவின் 288 தொகுதி களுக்கும், ஜார்க்கண்ட்டில் எஞ்சியுள்ள 38 தொகுதி களுக்கும் புதன்கிழமையன்று(நவ.20) காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு கள் நவம்பர் 23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.