tamilnadu

img

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவை புதுப்பிக்க விஏஒ சான்று தேவையில்லை

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக.20- தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் பதிவை புதுப்பிக்க  தவறிய உறுப்பினர்கள் பதிவு தபால் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ பதிவை புதுப்பித்து கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர் சான்று தேவையில்லையென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக கட்டுமான தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பொன்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந் தார். அதில், “தமிழகத்தில் கட்டடத் தொழிலாளர்கள் கொரோனா கால த்தில் வேலையின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டது. இதனடிப்படையில் நலவாரி யத்தில் பதிவு செய்யப்பட்டு புதுப்பிக்க ப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு வழங்கியுள்ள 2000 ரூபாய்  போதுமானதாக இருக்காது. எனவே கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.

கட்டடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால் பெரும் பாலான தொழிலாளர்கள்  தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்ட னர்.  புதுப்பிக்காமல் உள்ள தொழி லாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். வேறு மாநிலத்தை  ஒப்பிடும் போது தமிழக அரசு கட்டடத் தொழிலாளர் களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை மிக, மிக குறைவானது ஆகும். எனவே நிவாரண தொகையை ஐந்தாயி ரமாக  உயர்த்தி வழங்க அரசுக்கு உத்தர விட வேண்டும். பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் இந்தத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரா யணன், ராஜமாணிக்கம் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட் டார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “நல வாரியத்தில் பதிவை புதுப்பிக்காத வர்களும்  நிவாரண உதவி பெறு வதற்கு தகுதி உடையவர்களே என தில்லி உயர்நீதிமன்றம் தனது உத்தர வில் தெரிவித்துள்ளது. எனவே பதிவைப் புதுப்பிக்காத கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் தற்போது கொரோனா  காலம் என்பதால் உறுப் பினர்கள் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக  விண்ண ப்பித்து தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். உறுப்பினர்கள் பதி வை புதுப்பிப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று அவசியம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு உள் ளது தற்போது உள்ள சூழலில் அதற்கு பதிலாக உறுப்பினர்கள் ஆதார் அட்டை தேர்தல் அட்டை போன்ற அடையாளச் சான்றிதழ்களை இணைத்து தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு  விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.