tamilnadu

img

கொரோனா விதிகளை மீறி மதுரையில் செயல்பட்ட பள்ளி.... எஸ்எப்ஐ முயற்சியால் அதிகாரிகள் நடவடிக்கை

மதுரை:
கொரோனா விதிமுறைகளை மீறிசெயல்பட்ட பள்ளி மீது இந்திய மாணவர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இந்திய மாணவர் சங்கத்தின் மதுரைமாநகர் மாவட்டத் தலைவர் க. பாலமுருகன், செயலாளர் எஸ்.வேல்தேவா,வாலிபர் சங்க தெற்குவாசல் பகுதிக் குழுச்செயலாளர் போனிஃபேஸ்,ஜெய்ஹிந்த் புரம் சத்தியா ஆகியோருக்கு மதுரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு பள்ளி கொரோனா விதிகளைமீறி செயல்படுவதாக தகவல் கிடைத் துள்ளது.

இதையடுத்து அவர்கள் சம்பந்தப் பட்ட பள்ளிக்குச் சென்றபோது, மாணவர்கள் முகக்கவசம் இன்றி, சமூக இடைவெளியின்றி அமரவைக்கப்பட்டிருப் பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர். அவர்களது உத்தரவின்பேரில் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கவும் முகக் கவசம் பெறுவதற்கும் தான் மாணவர்களை வரச்சொன்னதாக சமாளித் துள்ளது. பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக காட்டியவுடன், “ நாங்கள் பள்ளியை நடத்தவா? அல்லது இழுத்து மூடவா? மாதம் 5 லட்சம் ரூபாய் வரை எங்களுக்கு தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் போட வேண்டியுள்ளது” என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கூறியுள்ளனர். கடைசியாக மாணவர்களை அனுப்பி விடுகிறோம். அவர்களை புகைப்படம், வீடியோஎடுக்கக்கூடாது என நிபந்தனை விதித்தனர். பள்ளி மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா நோய் உள்ளதையும் மாணவர் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.