முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்
சென்னை, டிச. 31- விழுப்புரம் – நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த வர்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் டிசம்பர் 31 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் - நாகப்பட்டினம் இரு வழிச்சா லையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தால் (சூழஹஐ) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு எல்லை கற்களையும் நட்டுள்ளனர்.
இதற்கு நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக உதார ணமாக சதுர அடி ரூ. 350 எனவும், சார்பதிவா ளர் அலுவலகத்தில் பதியப்பட்ட மனைகளுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை இருமடங்கு எனக் கூறி ரூ. 150-மும், நிலங்களுக்கு ஒரு சென்ட் ரூ. 5 ஆயிரம் என மிகக் குறைவான
விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகள் உள்ள பல மனைகள், புஞ்சை, நஞ்சை நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு அனைத்தும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இழப்பீட்டுத் தொகை அதிகமாக வழங்கிட வேண்டுமென வலியு றுத்தி, நிலம் கொடுத்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த இரண் டாண்டுகளுக்கு மேலாக பலமுறை முறையிட் டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆனால் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடு துறை மாவட்டங்களில் குறைந்த விலை நிர்ண யம் செய்யப்பட்டு, பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக இம்மாவட்டங்களில் இழப்பீட்டு தொகை 5 முதல் 10 மடங்கு உயர்த்தி வழங்கிட சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு இருக்க, நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பொது மக்களை அடியாட்களை வைத்து உடனடியாக இடத்தை காலி செய்து தருமாறு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தை பறிகொடுத்த பொதுமக்கள் பரிதவித்து, கூடு தலாக இழப்பீடு கோரியும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அராஜக நடவ டிக்கையை கண்டித்தும், இதர கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச் சனையில் உடனடியாக தலையிட்டு சாலை விரி வாக்கப் பணிக்காக தங்களின் நிலங்கள், வீடு களை இழந்துள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கையினை நிறைவேற்றித் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1. நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக இழப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்துள்ள மக்களுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். 2. முழுமையான இழப்பீட்டுத் தொகை கொடுத்த பின்னரே பணிகளை ஆரம்பிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 3. சாலை விரிவாக்கம் நடக்கும் இந்த வழி யில் பல்லாண்டு காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் பட்டா இல்லாத குடும்பங்களின் வீடு களுக்கு மாற்று ஏற்பாடு செய்திடவும், கட்டிடங் கள் இடிக்கப்படும் போது பாதி கட்டிடம் இடிக் கப்பட்டாலும் அக்கட்டிடத்திற்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். 4. கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் குளுப்பை ராமசாமி செட்டியார் அறக்கட்ட ளைக்கு சொந்தமான நிலங்களில் குடியிருக் கும் 44 குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
5. கடலூர் மாவட்டம், கொத்தட்டை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு அமைக்கப்படவுள்ள சுங்கச்சாவடியை பொது மக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு வேறு இடத் திற்கு மாற்றியமைக்க வேண்டும். 6. அறிவிப்பு ஆணை கொடுக்காமலும் (3E), 60 நாட்களுக்கு முன்பு குடியிருப்ப வர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமலும் அப்பு றப்படுத்துவது சட்டவிரோதமானதாகும். முறையான வழிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரி கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.