tamilnadu

img

வீரம் செறிந்த வர்க்கப் போராட்டங்களே தேர்தல் வெற்றிகளையும் குவிக்கும்!

சென்னை, ஜூலை 19 – வீரம் செறிந்த வர்க்க போராட்டங்களே தேர்தல் வெற்றிகளையும் குவிக்கும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் முழங்கி னார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற தோழர் பி.ஆர். பரமேஸ் வரன் நினைவு தினம் மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா வில் விஜூ கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பேசு பொருளாக இருந்தது விவசாயிகளின் பேரழுச்சி. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மகத் தான பங்கு ஆற்றியுள்ளதை மற்றவர்களும்  அங்கீகரித்துள்ளனர். நமக்கு அப்பாற்பட்ட விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஒருவரே வருணித்தார், இந்தப் போராட்டத்தின் மூளை யும் முதுகெலும்பும் அகில இந்திய விவசாயி கள் சங்கம் தான் என்று.. பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா  உள்ளிட்டு 38 தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்ததன் பின்னணி யில் விவசாயிகள் போராட்டம் இருந்தது என்பதே உண்மை!

கறுப்புக் கொடி காட்டி  விரட்டப்பட்ட பாஜக! 

இந்தத் தேர்தல்களில் சம தளமான போட்டி இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து மறு புறம், பாஜக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது. பஞ்சாப்பில் நடந்தது என்ன.... பல சிற்றூர்களுக்குள் நுழைய முடியாமல், கிராம மக்களால் கறுப்புக் கொடி பாஜக கட்சியினர் விரட்டி அடிக்கப்பட்டனர். தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்ல முடியவில்லை.  வேறெங்கும் இல்லாத வினோதமாக பாஜக ஆட்கள், ‘எங்களுக்கு சமதள போட்டி இல்லை’ என்று தேர்தல் ஆணையத்திடம் போய் கதறியது பஞ்சாப்பில் நடந்தது. அந்த  கதிக்கு அவர்களை கொண்டு நிறுத்தியது விவசாயிகள் போராட்டம் தான்.   இப்போது மீண்டும் மோடி ஆட்சி அரங்கேறியுள்ள நிலையில் விவசாயிகள் கூட்டுப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அடுத்த போராட்ட அறிவிப்போடு களத்தில் இறங்கி விட்டது. அவர்கள் இப்போது தங்களது கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கையான ‘புதிய தொழிலாளர் சட்டங்கள் நான்கையும் தூக்கிப் போடு’ என்ற கோரிக்கையை யும் உயர்த்திப் பிடித்து வீதியில் இறங்கிவிட்டனர்.  வர்க்கப் போராட்டங்களே முக்கியம். எத்தனைக்கு எத்தனை வீரஞ்செறிந்த வர்க்கப் போராட்டங்களைக் களத்தில் நாம் முன்னெடுக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை தேர்தல் வெற்றிகள் தாமாக நம் பக்கம் வந்து குவியும். சோர்வின்றி மக்கள் நலனுக்கான போராட்டங்களைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டும்.

சிலிர்க்க வைக்கும் போராட்டங்கள் 

நான் கீழ்வெண்மணிக்கு நான்கு தடவை சென்று வந்தேன். வாச்சாத்திக்குச் சென்று அங்கே நடந்த கொடுமைகளில் பாதிப்புற்ற பெண்களின் கண்ணீரைக் கண்டேன். பாதிப்புற்ற மக்களை, அவர்களுக்கு ஆதரவாக நமது இயக்கங்கள் நடத்திய போராட்டக் களங்களை நேரில் பார்த்தேன். உணர்வுப்பூர்வமான இயக்கப் பங்கேற்பு முக்கியமானது. நமது தத்துவார்த்தப் பயிற்சி என்பதை மற்றும் நேரடியான தத்துவப் புத்தகங்களை விடவும் போராட்டக் களங்கள் கதைகள் வழியே நாம் இன்னும் நெருக்கமாகச் சென்றடைய முடியும்.  கேரளத்தில் ஆண்டு தோறும் விவசாயி கள் சங்க உறுப்பினர் சேர்ப்பு, சேலம் சிறைத் தியாகிகள் நாளில் தான் தொடங்கப்படுகிறது. வாச்சாத்தி தீர்ப்பை பிரதியெடுத்து நாடு நெடு  கிலும் எண்ணற்ற மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம். பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கே இந்தச் செய்திகள் புதிதாக இருப்பதையும் ஆர்வத்தோடு அவர்கள் அறிந்து சிலிர்ப்பதையும் பார்க்கிறோம். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாறியது எப்படி?

இந்தத் தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்த தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுகளையும் பரவலாக மிகவும் சிலாகித்துப் பேசினர். கவனத்தில் கொள்ளத்தக்கதாக அவை அமைந்தது உண்மை தான். ஆனால் மற்றோர் உண்மையும் உண்டு. 2019 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் முன் வைத்த வாக்குறுதிகள் என்ன? விவசாயி உற்பத்தி சந்தைக் குழுக்களை கலைத்து விடுவோம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை ரத்து செய்வோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னவை தான், பின்னாளில் பாஜக ஆட்சியில் வேளாண் சட்டங்களாகக் கொண்டு வரப்பட்டன. அது மட்டுமல்ல, நாங்கள் கொண்டு வந்த புதிய தாராளமய சீர்திருத்தங்களை 2014-2019 ஐந்தாண்டு மோடி ஆட்சி மிகவும் மந்த கதியில் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது, எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் அவற்றை வேகமாக அமல்படுத்துவோம் என்றும் சொன்னது காங்கிரஸ் கட்சி.  ஆனால், நடந்து முடித்த தேர்தல்களில் அவர்களது, மொழியே மாறி இருக்கிறது. தேர்தல் அறிக்கையின் தன்மையே வேறாக இருக்கிறது. அதன் பொருள் என்ன, நமது போராட்டங்களின் வீச்சும், அவற்றிலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளின் அழுத்தமும் தான் அவர்களது, குரலை மாற்றி இருக்கிறது.  போராட்டக் களங்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சுவதில்லை. அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் கவலைப்படாது நாம் தான் மக்கள் நலனில் போராட்டங்களில் இறங்குகிறோம். மகாகவி பாரதி சொல்லி இருப்பாரே, ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பது இல்லையே’ என்று! அதன் வழி துணிந்து போராட்டக் களம் காண்கிறோம். 

நாம் வெல்வோம்!

தோழர் பி.ஆர். பரமேஸ்வரன், ஓர் எளிய தையல் தொழிலாளியாக இருந்து பொதுவுடைமை இயக்கத் தத்துவ ஆசிரியராக, இயக்கத்தைக் கட்டி வளர்ப்பவராக, பெரும் போராட்டங்களை வழி நடத்துபவராக உயர்ந்தார் என்று அறிகிறோம். தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களும் பள்ளிக் கல்வியை முழுமையாகப் பெற இயலாத சூழலில் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அசாத்தியமான போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர், எண்ணற்ற தோழர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவர். கேரள முதல்வராகவும் ஆனவர். தோழர்  ஏ.கே. கோபாலன் நாடாளுமன்ற உறுப்பின ராகச் சிறப்பாக இயங்கியவர். அவரது ஆங்கிலம் இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்காது. அப்போது அதை எதிர்ப்பக்கம் எள்ளி நகையாடி இருக்கின்றனர் சிலர். அதற்கு தோழர் ஏ.கே. கோபாலன், ‘ எனது ஆங்கிலம் வேண்டுமானால் உடைந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் கைக்கொண்டிருக்கும் உயர்ந்த தத்துவம் ஒரு போதும் உடையாது. வலிமையானது’ என்று பதில் சொன்னாராம். இப்படியான தலைவர்களின் பங்களிப்பும், செயல்பாடுகளும் நம்மை முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்தும். நாம் வெல்வோம். இவ்வாறு விஜு கிருஷ்ணன் பேசினார். இந்நிகழ்ச்சியில் தீக்கதிருக்கு வளர்ச்சி நிதி ரூ. 25 ஆயிரம் விஜூ கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.