வைகைக் கரையின் ஓரத்தில்
வளமார் மதுரை நகரத்தில்
வையம் புகழும் மாநாடு
வாரீர் வாரீர் தோழர்களே!
கொள்கை வகுக்கும் தலைவரெலாம்
கூடல் நகரில் கூடுகின்றார்
கொடிகள் ஏற்றி வாசலெலாம்
கோலம் போட்டே அலங்கரிப்போம்!
மண் சிவக்க விண் சிவக்க
மதுரை நகரே ஜொலிஜொலிக்க
கண்ணும் கருத்தும் கவரும் வண்ணம்
கலை எழில் நகராய் மாற்றிடுவோம்!