tamilnadu

img

கேரள, தமிழக முதல்வர்கள் பங்கேற்புடன் ஏப்.1 இல் துவக்கம்; 603 நாட்கள் கொண்டாட்டம்

வைக்கம், மார்ச் 17- வைக்கம் போராட்டத்தின்  நூற்றாண்டு துவக்க விழாவை ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 4.30 மணிக்கு வைக்கத்தில் கேரள  முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.  இவ்விழாவை மாநிலம் முழுவதும் கேரள கலாச்சாரத் துறையின் சார்பில்  603 நாட்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. வைக்கம் சத்தியாகிரகம் நடந்த 603 நாட்களை நினைவுகூரும் வகை யில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாநில அளவிலான தொடக்க விழா மற்றும் நிறைவு விழா வைக்கத்தில் நடை பெறவுள்ளது. விழாவை நடத்த முதல்வர் பினராயி விஜயன் தலைவராகவும், அமைச்சர் சஜி செரியன் செயல் தலைவ ராகவும் ஒரு ஏற்பாட்டுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. எஸ்என்டிபி பொதுச் செய லாளர் வெள்ளாப்பள்ளி நடேசன், என்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஜி. சுகுமா ரன் நாயர், கேபிஎம்எஸ் பொதுச் செயலா ளர் புன்னலா ஸ்ரீகுமார், தாமஸ் சாழிக் காடன் எம்பி, சி.கே.ஆஷா எம்எல்ஏ, வைக்  கம் நகராட்சித் தலைவர் ராதிகா ஷியாம், துணைத் தலைவர்கள், தலைமைச் செய லாளர் டாக்டர். வி.பி.ஜாய் பொது அழைப்  பாளராகவும், கலாச்சாரத் துறை செயலா ளர் மினி ஆண்டனி அழைப்பாளராகவும் உள்ளனர்.

மாவட்டங்களில்  வரவேற்புக் குழுக்கள்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தலைவ ராகவும், மாவட்ட ஆட்சியர் கன்வீனராக வும் அனைத்து மாவட்டங்களிலும் வர வேற்புக் குழு அமைக்கப்படும். வைக்கத் தில் மாநில அளவிலான தொடக்க விழா வுக்கு முதல்வர் பினராயி விஜயன் புரவல ராகவும், அமைச்சர் வி.என்.வாசவன் தலை வராகவும் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜி செரியன் பொது அமைப்பாளராகவும், கலாச்சாரத் துறை செயலாளர் அமைப்பா ளராகவும் உள்ளனர். வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தை அமைச்சர் வி.என்.வாசவன் துவக்கி வைத்தார். நூற்றாண்டு விழா திட்டத்தை அமைச்சர் சஜி செரியன் விளக்கினார். சி.கே.ஆஷா எம்எல்ஏ தலைமை வகித்தார்.