இம்பால், மே 9 - மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இடதுசாரி கட்சித் தலை வர்கள் ஆளுநரை சந்தித்து வேண்டு கோள் விடுத்தனர். மணிப்பூர் மாநிலத்தின் சமவெளி, மலைப்பகுதி இனக்குழுக்களிடையே பன்னெடுங்காலமாக பிரிவினை இருந்து வருகிறது. இதில் சமவெளி பகுதியில் வாழும் மைத்தேயி இன குழுவினர் தங்க ளை பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரு கின்றனர். மைத்தேயி இன மக்களை பழங்குடி இனக் குழுவில் சேர்த்தால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என பழங்குடிகளான நாகா, குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தப் பிரச்சனையை முறையாக பாஜக அரசு கையாளாததால் தீவிரமாகியது. இந்நிலையில், திடீரென கடந்த வாரம் மணிப்பூர் மாநிலம் முழுவதும் மைத்தேயி - நாகா, குக்கி இனமக்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது. இதுவரை 60 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மே 8 அன்று மணிப்பூர் மாநிலத்தின் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அம்மாநில ஆளு நர் அனுசுயா யுகியை நேரில் சந்தித்து, மாநி லத்தில் ஒரு இணக்கமான தீர்வைக் கொண்டுவரவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுள்ளிட்ட ஆலோசனை களுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.