நாகர்கோவில், ஜூலை 10- மும்பையில் அரசியல் சட்ட மாமேதை பி.ஆர்.அம்பேத்கர் இல்லம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள நூல கம் மற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி உடைத்த சமூகவிரோதிகள் மற்றும் இவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோட்டூர் கோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பி.தாசன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பி.விஸ்வம்பரன், வட்டார குழு உறுப்பினர் ஜெனித், சசி, சுரேஷ், அய்யன் குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.