உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிவிட்டதாக மோடியும், யோகியும் தினந் தோறும் கலர் கலராக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, வாசகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்கள். ஆனால் உண்மையான உத்தரப்பிரதேசத்தை ஊடகங்கள் நாட்டு மக்களின் முன்பு கொண்டு வந்து நிறுத்துவதில்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள பல நாடுக ளுக்கு ஒப்பாக உத்தரப்பிரதேசத்தை சொல்ல லாம். தொழிற்சாலைகள் நிறைந்த நொய்டா பகுதி தவிர உ.பி.மக்களின் ஆண்டு தனிநபர் வருமானம் வெறும் ரூ.70,797 மட்டுமே. வாழ்வியலின் பல அம்சங்களில் ஆப்கானிஸ்தான் மக்களை விட கீழ்நிலையில் தான் உ.பி.மக்கள் இருக்கிறார்கள். பன்முக வறுமையின் பிடியில் ஐந்தில் இரண்டு பேர் சிக்கியுள்ளனர் என்பதே உண்மை.