tamilnadu

img

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்

ஜம்மு பச்சோந்தி அரசியலுக்கு பெயர் பெற்ற நிதிஷ் குமார் மக்களவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்ட ணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக கூட்டணியில் தனது ஐக்கிய ஜனதாதள கட்சியை இணைத்தார். 18ஆவது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்த நிலை யில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் தய வால் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார். இந்நிலையில், “மத்தியில் பாஜக வுடன் கூட்டணி வைப்பதை மறுபரிசீல னை செய்ய வேண்டும்” என நிதிஷ் குமாரை ஜம்மு-காஷ்மீர் ஐக்கிய ஜனதாதள பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.  இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள ஜம்மு-காஷ்மீர் பிரிவு மாநில பொதுசெயலாளர் விவேக் பாலி செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில்,”ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் நடவடிக்கைகள் மிக  மோசமானதாக உள்ளது. மாநி லத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள்  மற்றும் அறிஞர்களுடன் நன்மதிப்பை தொடரவும், நட்பாக பணியாற்றவும் ஐக்கிய ஜனதா தளம் செயலாற்றி வருகிறது. ஆனால் இதற்கு பெரும் பாஜக தடையாக உள்ளது. இஸ்லா மிய மக்களுடன் நட்பை தொடர பல்வேறு தடைகளை விதித்து வரு கிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முடிவை யும், மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் நிதிஷ் குமாரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்” என அவர் கூறினார். சலசலப்பு நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நாள் முதலே தங்களுக்கு மரியாதை, மதிப்பு போய்விட்டதாகவும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தள பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் புலம்பி வருவதாக கடந்த 2 மாதங் களாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து தற்போது ஒரு மாநில பிரிவே பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என கூறி யுள்ளது பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் குமாரின் மவுனத்தால் பாஜக கலக்கம்

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு தலைமறைவாக இருப்பது போல் கண்டும் காணாமல் உள்ளார். பீகாரின் துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி, நீட் முறைகேடு விவகாரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்விக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறினார். ஆனால் முதல்வர் நிதிஷ்குமார் தேஜஸ்வி மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தர்தலில் “இந்தியா” கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி. தொடர்ந்து முஸ்லிம் மக்களை புறந்தள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உ.பி., பாஜக அரசின் கன்வார் யாத்திரை உத்தரவுக்கு நிதிஷ் குமாருக்கு மிக நெருக்கமான கூட்டணியான கட்சியான லோக் ஜனசக்தியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு பீகார் மாநிலத்தில் கூட்டணிக்குள்ளயே பாஜகவிற்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும் நிதிஷ் குமார் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருவது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.