tamilnadu

6 மாத காலத்திற்குள் பிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் - கலப்பு மின்சார வாகனங்களை தயாரித்திடுக!

புதுதில்லி,டிச.28- இந்தியாவின் பெட்ரோலிய இறக்கு மதிக்கு மாற்றை உருவாக்கவும், விவசாயி களுக்கு நேரடியான பலன்களை வழங்க வும், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்க ஆறு மாத காலத்திற்குள் ஃபிளெக்ஸ் எரி பொருள் வாகனங்கள் மற்றும் கலப்பு மின்சார வாகனங்களை இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டிவிட்டரில்,  பிரதமரின் தற்சார்பு இந்தியா லட்சியத்தின் படி யும் எத்தனாலை போக்குவரத்து எரிபொரு ளாக மேம்படுத்துவதற்கான அரசின் கொ ள்கையின் படியும், ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்கள் 100 சதவீத பெட்ரோல் அல் லது 100 சதவீத பயோ-எத்தனால் மற்றும் அவற் றின் கலவையில் இயங்கும் திறன்கொண்ட வை ஆகும். கலப்பு மின்சார வாகனங்கள் வலுவான கலப்பு மின்சார தொழில்நுட்பத் தில் இயங்கும். 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்த கரியமில உமிழ்வை ஒரு பில்லியன் டன்கள் குறைக்க காப்-26 பருவநிலை மாநாட்டில் செய்யப்பட்ட உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்தியாவிற்கு உதவும் வகையில், வாகனங்களில் இருந்து வெளிவரும் பசுமை இல்ல வாயுக்களை இந்த நடவடிக்கையானது வெகுவாகக் குறைக்கும் என்று தெரிவித்தார்.