சென்னை, ஜன. 1- சமூக நீதியை சீர்குலைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டினார். புத்தாண்டு துவக்கத்தில் ஆண்டு தோறும் செய்தியாளர் களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் வைகோ. ஞாயிறன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர் அவர்களோடு சிரிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய மோடி அரசு ஆர்.எஸ்.எஸ். அஜன்டாவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் 370ஆவது சட்ட பிரிவை நீக்கினார்கள். புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்தப் பார்க்கிறார்கள். தமிழக ஆளு நரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசுகிறார். தமிழையும், திருக்குறளை யும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது. சமூக நீதியையும், மதசார்பற்ற தன்மையை யும் சீர்குலைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி. வரி தொகையை வழங்கு வதில் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வஞ்சகம் செய்கிறது என்றும் அவர் கூறினார்.