tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி.முயற்சியால் மாணவருக்கு ரூ.40 லட்சம் கல்விக்கடன்

மதுரை, டிச.31-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன்  முயற்சி யால் வெளிநாட்டில் பொறியியல் கல்வி பயில மாணவருக்கு யூனி யன் வங்கி  பிணையின்றி ரூ.40  லட்சம் கல்விக்கடன் வழங்கியுள் ளது.  ஒவ்வொருவரும் 2023-ஆம் ஆண்டு புத்தாண்டை ஒவ்வொரு விதத்தில் வரவேற்பார்கள். அந்த வகையில் தனது மகனுக்கு எந்த வித பிணையுமின்றி ரூ.40 லட்சம் கல்விக் கடன் கிடைத்ததை  டிசம்பர்  31-ஆம் தேதி ஒரு குடும்பத்தினர் கொண்டாடினர். இது புத்தாண்டு பரிசு என்று கூறி, கல்விக் கடன் பெறுவதற்கு உதவி செய்த சு. வெங்கடேசன் எம்.பி.க்கும் கடன்  வழங்கிய சம்பந்தப்பட்ட வங்கிக்  கும் அக்குடும்பத்தினர் நெகிழ்ச்சி யுடன் நன்றியை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் வில்லா புரத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் அரசு பொதுத்துறை வங்கி யில் நகை மதிப்பீட்டாளராகப் பணி யாற்றி வருகிறார். இவரது மகன்  யோகேஷ்வர், உலகளவில் தலை சிறந்த  பல்கலைக்கழகங்களில் 106  ஆவது இடத்தைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு  நகரில் உள்ள பல்கலைக்கழகத் தில்  மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படிப்பதற்கு தேர்வாகியுள் ளார். கல்விக்கட்டணமாக  ரூ.55 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம்  கூறி யுள்ளது. இதையடுத்து யோகேஷ்  வர் குடும்பத்தினர் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசனை சந்தித்து விபரங்களைக் கூறினர். சு.வெங்கடேசன் முன்  முயற்சியால் மதுரை  மேலமாசி வீதியில் உள்ள யூனியன் பேங்க்  ஆப் இந்தியா எந்தப் பிணை யுமின்றி மாணவர் யோகேஷ்வ ருக்கு ரூ.40 லட்சம் கல்விக் கடனை டிசம்பர் 31 ஆம் தேதி (சனிக் கிழமை) காலை வழங்கியது. யூனி யன் பேங்க் ஆப் இந்தியா மதுரை யில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் ரூ.1.20 கோடி  அளவிற்கு கல்விக்கடன் வழங்கி யுள்ளது. இவ்வளவு பெரிய தொகை யை பிணையின்றி கல்விக் கட னாக வழங்குவதற்கான வசதி  யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில்  மட்டுமே உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

சு.வெங்கடேசன் எம்.பி., வாழ்த்து

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், மதுரை வில்லாபுரம் பகு தியைச் சேர்ந்த மாணவர் யோகேஷ்வருக்கு ஆஸ்திரே லியாவில் உள்ள பல்கலைக்கழ கத்தில் உயர்கல்வி பயிலுவ தற்கு யூனியன் வங்கியில் தமிழ்  நாட்டிலேயே முதல் முறையாக  ரூ.40 லட்சம் பிணையில்லா கல்விக்கடன் வழங்கப்பட்டுள் ளது; மதுரை மேலமாசி வீதி யூனி யன் வங்கி கிளையின் சார்பில்  ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மாணவர் யோகேஷ்வருக்கு ரூ.40 லட்சத்திற்கான கல்விக்கடன் வழங்கப்பட்ட ஆணையை வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். வங்கியின் சார்பில் முதன்மை  மேலாளர் வரதராஜன், கிளை மேலாளர் சார்லஸ், துணை மேலா ளர் ரதீஷ் ஆகியோர் பங்கெடுத்தனர். உடன் சிபிஎம் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.