tamilnadu

img

ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் உலகம் முழுவதும் வறுமையின் பிடியில் 110 கோடி மக்கள்!

நியூயார்க், அக். 17 -  உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள், மிக மோசமான வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என ஐ.நா. வளர்ச்சித் திட்டம்  தெரிவித்துள்ளது.  மேலும் வறுமையால் பாதிக்கப்பட்ட வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் கவலை தெரிவித் துள்ளது.

2-ஆம் உலகப் போருக்குப் பிறகு 2023-இல் அதிகரித்த போர்கள்

ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்பு டன் இணைந்து, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா. வளர்ச்சித் திட்ட மானது, “இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 2023-ஆம் ஆண்டு தான் அதிக போர்கள் உருவாகியுள்ளன,” எனவும்; “இந்த போர்களால் நேரடியாக  பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வறுமையின் அளவு மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பல பரிமாண வறுமை என்பது வறுமையின் அளவீடு ஆகும். இது மனிதனின் நல்வாழ்விற்குத் தேவையான வீடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, சுத்தமான குடிநீர், மின்சாரம், வேலையின் தரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி கணக்கிடப்படுகிறது.

112 நாடுகளில் 110 கோடி பேர்  பல பரிமாண வறுமை

ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்பும், ஐ.நா.வும் கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் 630 கோடி மக்களைக் கொண்ட 112 நாடுகளில் இருந்து தரவுகளை சேக ரித்து தங்கள் பல பரிமாண வறுமைக் குறி யீட்டு அறிக்கையை வெளியிட்டு வரு கின்றன. அதில் தான், தற்போதைய ஆய்வின் படி 2024 ஆண்டு 110 கோடி மக்கள், பல பரிமாண வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. “இந்த 110 கோடி மக்களில் 45.5 கோடி மக்கள் போர் ஏற்பட்டுள்ள நாடுகளில் வாழ்ந்து வரு கின்றனர்” என  ஐ.நா. வளர்ச்சி அமைப்பின் தலைமைப்  புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை தேவைக்கு போராடும் இளைஞர்கள் - குழந்தைகள்

“போர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடு களில் உள்ள ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 58.4 கோடி மக்கள் தீவிர வறுமையை அனு பவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதில் 27.9 சதவிகிதம் பேர்  குழந்தைகள். துணை-சஹாரா, ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் தான்  அதிக அளவில் மக்கள்  பலபரிணாம வறுமையில் பாதிக்கப்பட்டுள் ளனர். அதாவது 83.2 சதவிகிதம் மக்கள் இந்நாடுகளில் வறுமையில் உள்ளனர்.  இந்த வறுமையை குறைக்கும் நட வடிக்கையில் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக் கள் ஈடுபடுவதற்கு, தற்போது நடை பெற்று வரும் போர் மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி அமைப்பின் சபீனா அல்கிரே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி  மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமை யில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, உலகள வில் உள்ள 110 கோடி ஏழை மக்களில் ஏறக்குறைய 50 சதவிகித ஏழைகள், இந்த ஐந்து நாடுகளில் மட்டும் உள்ளனர்.