tamilnadu

img

“நீட் தேர்வால் பலியான செல்வசேகர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

சென்னை, ஆக.14- நீட் தேர்வு விவகாரத்தில், தமிழ் நாடு மக்களின் மனநிலையை சுத்த மாக ஆளுநர் புரிந்துகொள்ளவே இல்லை என்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் தனது  மகன் தற்கொலை செய்து கொண்ட  விரக்தியில், அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து  கொண்டார். அவரது உடலுக்கு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்களன்று (ஆக.14) அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ நீட் தேர்வை ஆரம் பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம்.   தொடர்ந்து பல மாணவர்களை பலி கொடுத்திருக் கிறோம். இப்போது மாணவர்களின் குடும்பங் களையும் பலி கொடுக்கிறோம்”என்றார். தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றி அனுப்பியிருக்கி றோம். ஒருமுறை அந்த தீர்மா னத்தை ஆளுநர் திரும்ப அனுப்பி  வைத்து விட்டார். இன்னொரு முறை,  தமிழ்நாடு முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக குடியர சுத் தலைவருக்கு அந்த தீர்மா னத்தை அனுப்பி வைத்திருக்கிறார். எனவே, ஒன்றிய பாஜக அரசு விலக் களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.