tamilnadu

சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்தி ஏப்.27-இல் இருசக்கர வாகனப் பேரணி

சர்வீஸ் ரோடு அமைக்க வலியுறுத்தி ஏப்.27-இல் இருசக்கர வாகனப் பேரணி

திருச்சி பழைய பால்பண்னை முதல் துவாக்குடி வரை

திருச்சிராப்பள்ளி, ஏப்.23 - திருச்சி பழைய பால்பண்னை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத் திற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு 4 வழிச் சாலை அமைத்த போது, 4 வழிச்சாலை விதிகளை மீறி அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்காமல் மேற்கண்ட 14.5  கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரி வாக்கம் செய்யப்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக் கான தெருக்கள் நேரிடையாக அதிவேக 4  வழி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதா லும், பிஎச்இஎல், ஒ.எப்.டி, எச்.ஏ.பி.பி தொழிற் சாலைகள் பல்வேறு உயர் கல்வி நிறுவ னங்கள் என இந்த சாலையை தினமும்  ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்வதா லும் ஏராளமான விபத்துகள் நடக்கும் சாலையாக இது மாறியுள்ளது. இதுவரை இந்தச் சாலையில் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார்  1500 பேர் உயிரிழந்துள்ளனர். பலர்  நிரந்தர ஊனமாகியுள்ளனர். அவர்களது  குடும்பம் வருமானம் இன்றி அவதிப்படு கிறது. எனவே இப்பகுதி மக்கள் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்த னர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கண்ட அணுகு சாலையை, சாலையின் இருபுறமும் உடனடியாக அமைக்க வேண்டும். அதற்கு மாநில அரசு  நிலங்களை கையகப்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை  அமைத்துத் தர வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும்  சில வியாபாரிகள் பெற்ற தடை ஆணை களும் தள்ளுபடி செய்யப்பட்டன. சர்வீஸ் சாலை உள்ளிட்ட சாலையின் மொத்த அகலம் 45 மீட்டர் என்றும், பேருந்து  நிறுத்தங்களில் 50 மீட்டர் என்றும், மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ள இடங் களில் 60 மீட்டர் என்றும் 2019 ஆம் ஆண்டு  தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக  மாநில அரசு காலதாமதம் செய்து இழுத் தடித்தது மட்டுமின்றி, உயர்மட்ட பாலம்  அமைக்கப்படும் என்று தற்போதைய மாநில அரசால் 2021 இல் அறிவிக்கப் பட்டது. இறுதியில் சர்வீஸ் சாலை மீட்புக் குழு வின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனு செய்ததில் அதன் மீது  நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது. அதில், தமிழக அரசு உடனடியாக அளவீடு செய்து  நிலம் கையகப்படுத்திட வேண்டும் என்றும்,  தேசிய நெடுஞ்சாலைத் துறை அணுகு  சாலையை அமைத்துத் தர வேண்டுமென வும், திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து  6 வாரங்களுக்கு ஒருமுறை மதுரை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தர விடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 6.3.2025 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 45 மீட்டர் சாலை யின் அகலத்தை 33 மீட்டர் என அளவை  குறைத்து நிலம் கையகப்படுத்த போகி றோம் என கூறியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பாதுகாப் பாக பயணம் செய்திட ஏற்கனவே திட்டத்தில் இருக்கும் பேருந்து நிறுத்த இடவசதி, நிழற் குடை மற்றும் சாலையை கடக்க அமைக்கப் படவிருந்த 5 மேம்பாலங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளை கைவிடும் நிலை இருக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் பொது மக்களை பற்றி எந்த அக்கறையும் இல்லா மல், ஒரு சில கட்டிட உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கில், அணுகு சாலையை  அமைக்காமல் இழுத்தடிப்பு செய்து சிக்க லாக்கி விடுவதற்கான திட்டமாகவே தெரி கிறது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வரும் அப்பகுதி மக்களை உதாசினப் படுத்தும் செயலாகும். பல கட்ட ஆலோ சனை, விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட  2019 ஆம் ஆண்டின் மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும்.  45 மீட்டரை 33 மீட்டராக குறைப்பது  என்பது அந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலையும் விபத்துகளையும் ஏற்படுத்துவதாகும். திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த சாலையில் போக்குவரத்து மூன்று மடங்காக  உயர்ந்துள்ளது. எனவே தமிழக அரசு தற்போது அளவை குறைத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிர மாண பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். உடனடியாக அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை  துவக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்.27 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு  அனைத்துக் கட்சி களின் சார்பில், அரியமங்கலம் முதல் திரு வெறும்பூர் வரை கருப்பு கொடி கட்டி இரண்டு  சக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. இதில், அனைத்துப் பகுதி மக்களும், அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பினரும் பெருமளவு பங்கேற்க வேண்டுமென கேட்டுக்  கொள்கிறோம் என சிபிஎம் காட்டூர் பகுதிச்  செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.