திருச்சிராப்பள்ளி, ஜன.19 - ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே 68 ஆவது தடகள விளையாட்டு போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் 14 வயதினருக்கு இடையேயான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தேவிகா தங்கம் வென்று முதல் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜானவி வெள்ளி வென்று 2 ஆம் இடமும் பிடித்தனர். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி எஸ். கிருத்திகா தேசிய அளவில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். போட்டிகள் முடிந்து திருச்சிக்கு வந்த பள்ளி மாணவி எஸ்.கிருத்திகா வுக்கு திருச்சி ரயில் நிலையத்தில், காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பி லும் மாணவியின் பயிற்சியாளர் முனி யாண்டி தலைமையில் மாற்றம் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒயிட் ரோஸ் பொது நல அமைப்பின் தலைவர் சங்கர், அமிர்தம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் யோகா விஜயகுமார், தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகர்-இயக்குநர் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவர் ஆர்.ஏ.தாமஸ், மாணவியின் பெற்றோர் உட்பட திரளான விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.