tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமைச்சர் பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. வளர்ச்சி விகிதத்தில் கூட்டுறவு துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடை கிறேன். 11.83 லட்சம் பேருக்கு ரூ.4,918 கோடி தள்ளுபடி  சான்றிதழுடன், அடமான நகைகள் திருப்பி வழங்கப்பட்டு உள்ளன. 68 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.54,968 கோடி பயிர்  கடன் வழங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட 19,791 பெண்களுக்கு 5 சதவீத வட்டி யில் ரூ.65 கோடி கடன் கொடுத்துள்ளதால் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூட்டுறவுத் துறை  அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரிடம் திருச்சி சிவா வாழ்த்து

சென்னை: “உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு.  இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானா கவே தந்துள்ளார்கள்” என்று திமுக துணைப் பொதுச் செய லாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதலமைச்சரை சந்தித்து  வாழ்த்து தெரிவித்ததாக திருச்சி சிவா எம்.பி. செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார்.

என்னுடைய எதிர்பார்ப்பு

சென்னை: “என்னுடைய விருப்பம்; ஆசை; எதிர்பார்ப்ப தெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் நினைத்தது; இன்றும் நான் நினைப்பது ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ்  இருவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும். தேர்தல் நெருங்கி வருகிற காலத்தில் ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி யைப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.  அது சம்பந்தமாக மருத்துவர் அய்யாவிடம் பேசினேன்” என பாமக கவுரவத் தலைவர் கோ.க.மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சாதனையாளர் விருது

சென்னை: 2024-25 ஆம் கல்வியாண்டில் ஆதார் பதிவு பணி அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு புதுப்பித்தல் பணி செயல் படுத்தப்பட்டது. பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்ட செயல்பாட்டுக் காக தேசிய அளவிலான சாதனையாளர் விருது வழங்கப் படுகிறது.

போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்து நர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில்,  முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. 

நிலத்தை மீட்க உத்தரவு

சென்னை: சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதி மன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,  ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மே  8 அன்று மாலை 6 மணி முதல் 5 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண்பதற்கு 13,600 பேருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிமுக-விலிருந்து விலகல்

சென்னை: “கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு  அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன். தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணி யில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக் கிறது. எனவே கட்சியின் அனைத்துவித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்”  என்று எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான ஆர்.சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில்  கே.என்.நேருவின் சகோதரர்

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, ரவிச் சந்திரன் அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசா ரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலை யில், நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

நெல்லை முபாரக் நன்றி

சென்னை: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மா னம்; திமுக சார்பில் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்ததற்காக சென்னை அண்ணா அறிவாலயத் தில் வெள்ளிக்கிழமை (ஏப்.11) முதல மைச்சர் ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சி  மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்  மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது எஸ்டிபிஐ  கட்சி.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்நிலையம். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால்,  பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிலையில், பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது புரளி என்பது தெரிய வந்தது.