tamilnadu

img

பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு மதுரையில் எட்டாவது நாளாக போராட்டம்

மதுரை, நவ.14-  மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு, 2000க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கர் எனும் (ST)பழங்குடியினர் சாதி சான்றிதழ் கடந்த ஆண்டு வரை  கொடுத்து வந்த நிலையில், தற்போது பல்வேறு காரணங்கள் கூறி மதுரை மாவட்ட நிர்வாகம் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தை களுக்கு இந்து காட்டு நாயக்கர் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி  பல்வேறு கட்டங்களாக போராட்டத் தை தொடர்ந்து வருகின்றனர். இரா.முத்தரசன் நேரில் ஆதரவு வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆதரவு தெரிவித்து பேசி னார். உடன் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் பா.காளிதாஸ், புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம் பேசினார். உடன் கட்சியின் மேற்கு ஒன்றியச் செய லாளர் ம.தனபாலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.பாண்டியன், கே.முருகேசன், ஜாகிர் உசேன், முருகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ -மாணவிகள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்தனர்.  மாணவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும்  எங்களை காட்டுக்கு போக சொல்வது போல உள்ளது. ஒவ்வொரு நாளும் எங்களது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. அத னால் நாங்கள் பள்ளிக்கு சென்று  படிக்க தான் சான்றிதழ் கேட்கிறோம். நீ படிக்க வேண்டாம் என்று சொல்வது போல மாவட்ட நிர்வாகத்தின் நட வடிக்கை உள்ளது. எனவே நாங்கள் மாற்று சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளோம். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: நீண்டகாலமாக இந்த பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து எஸ்டி பிரிவு என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வழங்க மறுத்துள் ளது மிக, மிக கண்டனத்துக்கு உரியது.  பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் வழங்கிய இந்து காட்டு நாயக்கர் எஸ்.டி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வழங்க மறுப்பது ஏன் என  புரியவில்லை. சாதி சான்றிதழ் விரை வில் வழங்குவார்கள் என நம்பு கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.