நாகர்கோவில், ஜூலை 24- கொரோனா நோய் தொற்று காலங்க ளில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப தொழிலாளர்களை யும், அலுவலக பணியாளர்களையும் எவ்வித நோய் தடுப்பு நடவடிக்கைகள் செய்யாமலும், பணி பாதுகாப்பு இல்லாமலும் சிறப்பு விடுப்பு வழங்காமல் பணிக்கு வரவழைத்து வேலை செய்ய வைப்பதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனை முன்பு சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி கள் எஸ்.அருணாசலம், இளங்கோ, ஏஐடியூசி நிர்வாகி நீலகண்டன், எச்எம்எஸ் நிர்வாகி குமாரசாமிபிள்ளை, ராபின் உட்பட ஏராள மான தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.