tamilnadu

img

வயதான காலத்திலும் அலைக்கழிப்பதா?

சென்னை, டிச. 29- வயதான காலத்தில் எங்களை அலைக்கழிப்பது நியாயமா? என்று முழக்கமிட்டு போக்குவரத்து ஓய்வூதியர்கள் காவல் துறையின் தடைகளையும் மீறி ஆவேசமாக மறியலில் ஈடுபட்டனர். 86 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களில் வியா ழனன்று (டிச. 29) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக, சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு ஏராளமான ஓய்வூதியர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். பல்லவன் சாலை சந்திப்பில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து தடுத்தனர். ஆனா லும், காவல்துறையினரின் கெடு பிடிக்கு அஞ்சாமல் தடுப்பை தகர்த்தெ றிந்து அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், துணைத் தலைவர் கே.பி.அன்பழகன், ஓய்வு  பெற்றோர் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், பொரு ளாளர் ஏ.வரதராஜன், துணைப் பொதுச்செயலாளர் கே.வீரராகவன்  அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தயானந்தன், தலைவர் துரை, பொருளாளர் பாலாஜி, சென்னை கோட்டத் தலைவர் நீலமேகம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். எஸ்.சுப்பிரமணியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.ஸ்ரீதரன் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

நூதனப் போராட்டம்

இந்த போராட்டத்தின் ஒரு பகுதி யாக, வயதான காலத்தில் தங்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்காமல் அரசு, பிச்சை எடுக்க வைத்து விட்டதாகக் கூறி பேருந்து பயணிகளிடம் பிச்சை கேட்டனர். இந்த மறியல் குறித்து கே.பி.அன்பழகன் கூறுகையில், அகவிலைப்படி, ஓய்வு பெறும்போது வழங்க வேண்டிய பணப்பலன்கள், வருங்கால வைப்பு நிதி, சொசைட்டி பணம் என இப்படி ஏதாவது ஒரு வகையில் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”என்றார். திமுக அரசு பொறுப்பேற்று 18 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை ஓய்வூதியர்கள் பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை. கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தி னோம். அமைச்சரை, அதிகாரி களை, போக்குவரத்து செயலாளரை  சந்தித்து பலமுறை சந்தித்து முறையிட்டோம். தீர்வு ஏற்பட வில்லை. இதனால் ஓய்வூதியர் களுக்கு ஆதரவாக வேலை நிறுத் தம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு போக்குவரத்து தொழிலா ளர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.