கோவை, ஜூன் 29- தீக்கதிர் கோவை பதிப்பின் ஆசிரியர் குழு பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டது. கோவை மாநகரம், ராமநாதபுரம் பகுதி யில் செயல்பட்டு வந்த தீக்கதிர் கோவை பதிப்பின் ஆசிரியர் குழு மற்றும் எண்மப் பதிப்பு ஆகியவை மசக்காளிபாளையம் பகு திக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற் கான புதிய அலுவலகத்தை வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் திறந்து வைத்தார். கணினி பயன்பாட்டை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தீக்கதிர் கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.கே.மாணிக்கம், பொறுப் பாசிரியர் எம்.கண்ணன் மற்றும் தீக்கதிர் பணி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேசமயம் தீக்கதிர் கோவை பதிப்பின் நிர் வாகப்பிரிவு, ஏற்கனவே உள்ள ராமநாதபுரம் பகுதியில் தொடர்ந்து செயல்படும்.