tamilnadu

img

மின்வெட்டிற்கு முழு காரணமும் மோடி அரசுதான்!

புதுதில்லி, மே 11- இந்தியாவில் உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 3 மணி முதல் அதிகபட்சம் 7 நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.  இந்நிலையில், கடுமையான இந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு முழுவதுமே மோடி அரசுதான் காரணம் என்பதற்கான புதிய  புதிய தகவல்கள் நாளும் வெளியாகி வரு கின்றன. மின்நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வெட்டியெடுக்கும் பொதுத்துறை நிலக்கரி நிறுவனமாக ‘கோல் இந்தியா’ உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சொந்த மான நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நாடு  முழுவதும் உள்ள அனல் மின்நிலையங்க ளுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்குத் தேவையான வேகன்களை இந்திய ரயில்வே எதிர்பார்த்த அளவிற்கு வழங்கவில்லை என்பதே முக்கியப் பிரச்சனையாக கூறப்படு கிறது. மாதம் தோறும் வழங்க வேண்டிய ரயில்வே வேகன்களின் எண்ணிக்கையை கடந்த ஓராண்டாக மோடி அரசு வெகுவாக குறைத்துள்ளது.

இந்தியாவின் மின்னுற்பத்தி நிலக்கரி யைச் சார்ந்தே உள்ளது. இந்த மின்னுற் பத்திக்கு தேவையான நிலக்கரியில் 80 சத விகிதத்தை அரசு நிறுவனமான ‘கோல் இந்தியா’தான் வெட்டி எடுக்கிறது. அவ்வாறி ருக்க ஒன்றிய அரசும் ரயில்வே அமைச்சகமும் சரக்கு வாகனங்களை வழங்காததால் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பை அதிகப்படுத்த முடியாமல், அதுவே தற்போது மின்னுற்பத்தி முடக்கத்திற்கு முழுமையான காரணமாக மாறியுள்ளது. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 27.6 சதவிகிதம் அதிகரித்துள்ள போதிலும், மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு  ஏப்ரல் மாதத்தில் 13 சதவிகிதம் குறைந்துள் ளது. ஏப்ரல் மாதத்தில் மோடி அரசு நாளொன்றுக்கு 261 ரயில் சேவைகளை மட்டுமே ‘கோல் இந்தியா’விற்கு ஒதுக்கியதே நிலக்கரி இருப்பு குறைவுக்கு காரணம்.  இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் பெரும்பாலும் நிலக்கரி விநியோக சேவையின் மூலமே கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட நிலக்கரிகளை எடுத்துச் செல்வதற்கு மோடி அரசு ரயில்களை ஒதுக்கவில்லை. இதேபோல மின்சாரம் அல்லாத துறை களுக்கான நிலக்கரி விநியோகமும் (அலு மினிய ஆலைகள், இரும்பு உருக்காலைகள்) ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதா வது நாளொன்றுக்கு 3,04,933 டன்னாக குறைந்துள்ளது. இவற்றுக்கும் உரிய ரயில்வே பெட்டிகளை வழங்காததே காரணமாக அமைந்துள்ளது. இதனால் அலுமினிய உற்பத்தி நிறு வனமான நால்கோ (NALCO) கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந் துள்ளது. இவ்வாறு அரசு சார் நிறுவனங்களுக்கு போதுமான நிலக்கரி வழங்காததால் அவர்கள் தற்போது அதிக விலை கொடுத்து தனியாரி டம் மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டா யத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்து வரு கின்றனர்.