பழனி,நவ.10- பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பழனி வணிகரின் தனி மாவட்டமாக ஏ எம் விக்ரமாஜா பொதுக்குழுவில் அறிவித்தார். பொருளாளர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜு, பொருளாளர் சதக்கத்துல்லா மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன் ஆகியோர் பேசினர். பழனி கொடைக்கானல் ரோப் கார் திட்டப்பணியை விரைவாக துவக்க வேண்டும். பழனி புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட் அமைக்க வேண்டும். பழனி முதல் ஈரோடு ரயில் போக்குவரத்து சீக்கிரமாக நடைபெறவும் நக ராட்சி கடையை புதுப்பித்து பழைய கடை வியாபாரி களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு வாட கைக்கு விடவும் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி யும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.