tamilnadu

img

தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 3- மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு நிதி ரூ.7500, மாநில அரசு நிதி ரூ.5000, என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள்,  ஓய்வூதியத் தொழிலாளர் கள்,  வாரிய புதுப்பித்தலில் உள்ள தொழிலா ளர்கள் அனைவருக்கும்  நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஆர்.ஆர்.நகரில் பட்டாசு தீப்பெட்டி தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டி யன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூரைக்குண்டு, பி.குமாரலிங்கபுரம், அம்மன் கோவில்பட்டி ஆகிய  கிராமங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கு  எஸ்.ராம மூர்த்தி, கோமதி, வீராச்சாமி ஆகியோர் வகித்த னர். மாவட்ட இணைச் செயலாளர் எம்.சாராள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேலு,  கே.ராஜேந்தி ரன், ஏ.எம்.மாரி, ஜெ.ஜே.சீனிவாசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். 

சிவகாசியில்  முருகன் காலனி, முனீஸ்வ ரன் காலனி, போஸ் காலனி, அம்பளார்மடம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, பேருந்து நிலையம், நாரணாபுரம், பராசக்தி காலனி, முத்துராமலிங்க புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் கே.அர்ஜூனன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, கன்வீனர் சுரேஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனி, ஜோதிமணி, மகேந்திரன்  உட்பட பலர் பங்கேற்றனர்.  விஸ்வநத்தத்தில் சிஐடியு கிருஷ்ண மூர்த்தி, ஏஐடியுசி சமுத்திரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மோகன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். திருத்தங்கல்லில் சிபிஐ நகர் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் செய லாளர் பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி, தோணுகால், ஆவியூர், கடம்பங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் ஏ.அம்மாசி,  சிஐடியு கன்வீனர் பரம சிவம், கட்டுமான சங்க செயலாளர் முகமது அலி ஜின்னா, கண்ணன், குருசாமி, நல்ராம் உட்பட பலர் பங்கேற்னர். 

திருச்சுழியில் சுரேஷ்குமார், நரிக்குடியில் முனியசாமி ஆகியோர் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  வி.முருகன், ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  அருப்புக்கோட்டையில் மரக்கடை பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம், இந்தியன் வங்கி, பாவடி தோப்பு ஆகிய இடங்களில் நடை பெறற  ஏஐடியுசி  முனியசாமி, சிஐடியு கன்வீனர் ராஜா ஆகியோர் தலைiமை வகித்தனர். ஏஐடியுசி மாவட்டக்குழு உறுப்பினர் இளங்கோ வன், முனியசாமி, சிஐடியு கன்வீனர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சந்திரமோகன்,  நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, உதயகுமார், பழனிசாமி, ஆத்தியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.  பாளையம்பட்டி, காமராஜர்புரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு  ராமலட்சுமி, எஸ்.பூங்கோதை, சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.அசோகன், கன்வீனர் அண்ணாதுரை,  ஒன்றியச் செய லாளர் எம்.கணேசன், முத்திருளன்  உட்பட பலர் பங்கேற்றனர். 

திண்டுக்கல்

திண்டுக்கல் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப்  நிர்வாகி செயலாளர் அழகர்சாமி, ஏஐடியுசி. மாவட்டத்தலைவர் ஜெயமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன்,  எம்எல்எப் மாவட்டச் செயலாளர் மோகன், ஏஐசிசிடியு, மாவட்டச் செயலாளர் மணிவேல், டியுசிசி பசும்பொன்ராஜா, ஐஎன்டியுசி  ராஜேந்திரன், எச்எம்எஸ் ஆரோக்கியதாஸ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ரெட்டியபட்டி, பூதிபுரம், காட்டாஸ்பத்திரி பகுதிகளில்  கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பேகம்பூரில் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம்,  சத்திரம் தெருவில் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பாக  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் ராஜரத்தினம், பாளையத்தில் சிஐடியு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்ரமணி, தலைமை வகித்தார். 

கடமலைகுண்டு

கடமலைகுண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தயாளன் தலைமை வகித்தார்.  போஸ்,  நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடும்பாறையில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராமசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில்  இராமேசு வரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், மாரியூர், கடலாடி, தொண்டி, முதுகுளத்தூர்  என 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம், போக்கு வரத்து, குடிநீர், அரசு உப்பு, டாஸ்மாக், ஆட்டோ, கட்டுமானம், கடல், முறைசார சங்கம், தையல், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை, கைத்தறி உள்ளிட்ட சங்கங்களைச்சேர்ந்த தொழிலாளர் கள் சிஐடியு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பரமக்குடி

பரமக்குடி அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சிஐடியு - ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மத்திய சங்க தலைவர். எஸ்.ஆர்.ராஜன். பொதுச்செய லாளர். தெய்வீரபாண்டியன், ஏஐடியுசி தலைவர். செல்வராஜ்  கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர். வி.காசிநாததுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடலாடி

கடலாடியில் உள்ளாட்சி ஊழியர்சங்க தாலுகா செயலாளர் பிரான்சிஸ் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  விவசாயி கள் சங்க மாவட்டச்செயலாளர் மயில் வாகணன், சுப்பிரமணியன்,முருகவேல், மூர்த்தியம்மாள், மாரியம்மாள், உப்பள தொழி லாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.