tamilnadu

img

மூணாறின் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

மூணாறு, ஜன.16- மூணாறின் குளிர்ச்சியை அனுபவிக்க வெளிநாட்டி னர் உட்பட ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பனிப்பொழி வைக் காண ஏராளமானோர் பல இடங்களில் குவிந்தனர். கடந்த 9ஆம் தேதி முதல் மூணாரின் பல்வேறு பகுதி களில் வெப்பநிலை மைனஸ் மூன்றாக குறைந்துள்ளது. கன்னிமாலா, செந்துவரை, நல்லதண்ணி போன்ற தோட்  டங்களிலும், பாம்படும் சோலை தேசிய பூங்கா பகு திகளிலும் புல்வெளிகளில் பனி படர்ந்து காணப்பட்டது. பனி படர்ந்த பகுதிகளுக்கு அதிகாலையிலேயே குழந்  தைகள் உட்பட பொதுமக் கள் சென்று வந்தனர். புல்  வெளிகளில் இருந்து பனி யை சேகரித்து இயற்கை காட்சிகளை ரசித்து சுற்றுலா பயணிகள் திரும்பினர். பனிப்பொழிவுக்கு கன்னி மாலா எஸ்டேட் மிகவும் பிர பலமானது. பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பய ணிகளால் மூன்று நாட்கள் பரபரப்பாக காணப்பட்டது. ராஜமலை, மாட்டுப்பெட்டி,  எக்கோ பாயிண்ட், டாப் ஸ்டே ஷன் ஆகிய இடங்களில் மக்  கள் கூட்டம் அலைமோதி யது. மூணாறு ஹைடல் பார்க், டிடிபிசியின் தாவர வியல் பூங்கா மற்றும் கேஎஃப்டிசியின் தோட்டம் ஆகியவை பரபரப்பாக இருந்தன. மாட்டுப்பெட்டி, ராஜமலைக்கு சென்று திரும்பும் மக்களின் வாக னங்கள் பல கிலோ மீட்டர் தூரம் தேங்கின. மூணாறு நக ரில் வாகனங்களை கட்டுப்  படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர்.