தூத்துக்குடியில் சாலை விபத்தில் 2 பேர் பலி
தூத்துக்குடி, ஜூன் 16- தூத்துக்குடியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்த வர் காதர்கொடி (60). இவர் அங்குள்ள அய்யன்கோவில் தெருவில் ரோட்டை கடந்து செல்கையில் சிவகங்கையிலி ருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக் குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்குதெருவை சேர்ந்த வர் கருப்பாமி மகன் முத்துராஜ் (23).இவர் துறைமுக பைபாஸ்ரோட்டில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் பைக் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நீச்சல் போட்டி பள்ளி மாணவர்கள் தேர்வு
திருநெல்வேலி, ஜூன் 16- தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவி கள் தேர்வு பெற்றுள்ளனர். சென்னை வேளச்சேரியில் 36ஆவது சப்- ஜூனியர் மற்றும் ஜூனியர் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கவுசிக் விக்டோ 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலமும், ஜெயவிகேஷ் 1 தங்கம், 2 வெள்ளியும், லெனார்ட் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல மும், விஸ்வ பாரத் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல மும் வென்றனர். மாணவர்கள் எபி ரிச்சர்ட் 2 வெள்ளியும், விஸ்வ தனஜெயம் 1 வெள்ளியும், ஷேன் லியோனல் 1 வெள்ளி, 1 வெண்கலமும் வென்றனர். மாணவிகள் பிரிவில் அபிஷா ஏஞ்சலின் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலமும், ஸ்மிர்த்தி ஜெ.பி. நாயர் 2 வெண்கலமும், கிருபா ஷிவாணி 2 வெண்கலமும் வென்றனர்.இவர்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வாகி யுள்ளனர். நீச்சல் போட்டியில் சிறப்பான இடத்தை பெற்ற மாணவர்-மணவிகளுக்கு பள்ளித் தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலெட்சுமி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்து தெரி வித்தனர்.
களக்காடு பகுதியில் மின் நிறுத்தம்
திருநெல்வேலி, ஜூன் 16- நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் 19ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது. இதுதொடர்பாக வள்ளியூர் செயற்பொறியாளர் (விநி யோகம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: வள்ளியூர் மின் வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட களக்காடு துணை மின் நிலையத்தில் இம்மாதம் 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை கோதைச்சேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளி குளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள் புரம், சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் மழைநீர் சேமிப்பு வசதியை உறுதி செய்ய அறிவுறுத்தல்
திருநெல்வேலி, ஜூன் 16- நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கடையநல்லூரில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு வசதியை உறுதி செய்ய ஆணையர் அறி வுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மழை பொய்த்ததன் காரணமாக நகராட்சிப் பகுதிக்கு நீர் வழங்கும் கருப்பாநதி அணை வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாகக் குறைந்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேமிப்பு திட்டத்தின் மூலம் 12 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மழைநீர் சேமிப்பு வசதி அனைத்து கட்டடங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என அரசு வலி யுறுத்தி வருகிறது. எனவே பழைய கட்டடங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு வசதியை பொது மக்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இந்த வசதி சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்ய வருகை தருவார்கள். அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் தண்ணீரை அந்த மழை நீர் சேமிப்பு தொட்டிக்கு திருப்பி விடும் வகையில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்கள் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதுடன் மழைநீர் சேமிப்பு வசதியையும் செம்மைப்படுத்த வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் பகுதியில் இன்று மின் தடை
தூத்துக்குடி, ஜூன் 16- திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 17) மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட உபமின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 17) மாதாந்திர பராம ரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலந்தலை, தோப்பூர், அமலிநகர், கல்லாமொழி, திருச்செந்தூர் பால்பண்ணைத் தெரு, தெற்குப் புதுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.