சென்னை,நவ.3- அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. 5647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் 30 ஆம் தேதியிலிருந்து வெள்ளியன்று (நவ.4) வரை கல்லூரி களில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ள னர். கோவை பி.எஸ்.ஜி. தனியார் கல்லூரியிலும் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடங்களை தெரிவு செய்த மாணவர்கள் வெள்ளியன்று மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். அதன்பிறகு, கல்லூரிகளில் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் சேகரிக் கும். காலியிடங்கள் அனைத்தும் இரண் டாவது கட்ட கலந்தாய்வில் நிரப்பப் படும்.