சென்னை, அக். 2- தேசத்தந்தை மகாத்மா காந்தி யின் 154ஆவது பிறந்த நாளை யொட்டி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வளா கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று (அக். 2) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் உ.பலரா மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, “சமூக நல்லிணக்கத்தை, அரசியல் சாசனத்தை பாது காப்போம், மதவெறி சக்தி களை முறியடிப்போம்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன் பேசுகை யில், மதவெறிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டவர் ஜவஹர்லால் நேரு. ஆர்.எஸ்.எஸ். வன்முறையை கடைபிடிக்கும் அமைப்பு என பகிரங்கமாக குற்றம் சாட்டியவர். அதனால்தான் ஒன்றிய அரசு நேருவை எதிர்த்து அடிக்கிறது. ஆனால் உலகளவில் புகழ்பெற்ற அம்பேத்கரையும், மகாத்மா காந்தியையும் அப்படி எதிர்த்து அடிக்க இயலாது. அதனால் இவர் களை அணைத்து அடிக்கிறார்கள் என்றார்.
நேருவை குறிவைப்பது ஏன்?
மதச்சார்பின்மை குறித்து நேரு ஆற்றிய உரையை ஒன்றிய அரசு அழிக்க முயற்சிக்கிறது. காந்தியடி களுக்கு மணிமண்டபம் அமைப்ப தற்காக குழு அமைத்து 12 கோடி ரூபாய் நிதி திரட்டினார்கள். குஜராத் மாநிலத்தில் 100 ஏக்கர் நிலம் வாங்கி அதில் சமர்பதி ஆசிரமம் கட்டப் பட்டது. அதை 5 அறக்கட்டளைகள் நிர்வகித்து வந்தன. இந்நிலையில் அந்த 100 ஏக்கர் நிலத்தை குஜராத் அரசு கையகப்படுத்தி விட்டது. அதே போல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அருங்காட்சியகம் உள்ளது. அந்த அருங்காட்சியகம் வெளியிடும் பத்திரிகையிலேயே தேசத்தந்தை காந்தி, தேசத்தந்தை சாவர்க்கர் என இரண்டு கட்டு ரைகள் வருகின்றன. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. நெசவாளியாக, விவசாயியாக, தொழிலாளியாக என்னவாக வேண்டுமானாலும் இருங்கள் ஆனால் மதத்தை தூக்கி எரியுங் கள் எனக் கூறினார் காந்தி. எனவே மதவெறி சக்திகளை புறக்கணிப் போம், சமூக நல்லிணக்கத்தை பேணி க்காப்போம் என இந்நாளில் அனை வரும் உறுதியேற்போம் என்றார்.
உ.பலராமன்
உ.பலராமன் பேசுகையில், தற் போதைய சூழலில் காந்தி பின்பற்றிய அகிம்சை நாட்டுக்குத் தேவைப்படு கிறது. எனவே அந்த அகிம்சை கொள்கைகளை முன்னெடுத்து சாதி வெறி, மதவெறி சக்திகளை முறி யடிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஜி.ஆர்.ரவீந்திரநாத்
ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேசுகை யில், காந்தியை சுட்டுக் கொன்ற கூட்டமே இன்று காந்தியை கொண்டாடும் மோசமான நிலை உருவாகியுள்ளது. சாதியின் பெய ரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி வன்முறையை தூண்டி விடுகின்றனர். காந்தி ஒருநாளும் வன்முறையை விரும்பாதவர். எனவே காந்தியின் கொள்கைகளை முன்னெடுப்போம். உலக சமாதா னத்தை பாதுகாப்போம் என்றார்.