மதுரை:
மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் வழங்கும் ஊக்கத் தொகையை இந்தாண்டு அதிகரிக்க வேண்டுமென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வெண்மணிசந்திரன், செயலாளர் முத்துப் பாண்டி, நிர்வாகி மகேந்திரன் ஆகியோர் ஆவின் துணை மேலாளர் ராஜாங்கத்திடம் மனு அளித்தனர். பின் அவர்கள் கூறியதாவது:பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகையை இந்தாண்டு அதிகரித்து வழங்க வேண்டும். கால்நடை தீவனத்திற்கு மானியம் விரைவில் வழங்க வேண்டும். பால் வழித்தடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி பதிவுகளைஉறுதி செய்ய வேண்டும். கொரோனாசவால்களை சந்தித்து ஆவினுக்குபால் வழங்கினோம். லாபத்தில்குறிப்பிட்ட சதவீதம் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது நடைமுறை. ஆவின் நிர்வாகம்’சூப்பர் டாக்ஸ்’ செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டுமென்றனர்.