tamilnadu

img

தலித் ஊராட்சித் தலைவருக்கு அவமரியாதை... வார்டு உறுப்பினர்கள் மீது புகார்....

மதுரை:
மதுரை மேலக்கால் தலித் ஊராட்சித் தலைவரை  பணி செய்ய விடாமல் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலக்கால் ஊராட்சித் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த  முருகேஸ்வரி பொறுப்பு வகித்துவருகிறார். ஊராட்சி மன்ற பணிகளை செய்ய விடாமல் இவரை வார்டு உறுப்பினர்கள் பழக்கடை பாண்டி, வட்டி காசி, இ.பி. பாண்டி, ராதா, கதிரவன் ஆகியோர் தடுத்துவருவதாக முருகேஸ்வரி கூறினார்.   ஊராட்சி மன்றம் சார்பில் கொண்டு வரப்படும் பணிகளின் தீர்மானங்களில் கையெழுத்துப் போட எனக்கு அனுமதியில்லை.  ஆயுதபூஜைக்கு சாமி கும்பிட அனுமதிக்கவில்லை, ஊராட்சி செயலர் ஒய்யனன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் ஆகியோர்உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், எனக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசுகின்றனர். எனவே ஐந்து ஊராட்சி உறுப்பினர்கள மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். இது தொடர்பாக ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் முருகேஸ்வரி வியாழனன்று புகாரளித்ததோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில்போராட்டமும் நடத்தினார்.