tamilnadu

img

தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்

ஆளுநரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர்  பினராயி விஜயன் உறுதி

சென்னை, ஏப்.18- மாநில அரசுகளால் நிறைவேற்றப் பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்குக் கால  நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜய னுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இது தொடர்பான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பினராயி விஜயன் பதில் கடிதம் எழுதியுள்ளார். 11-4-2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி யுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களைத் தாம் முழுமையாக ஆத ரிப்பதாகவும், அவை கேரளத்தில் நாங்  கள் எடுத்த நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகின்றன என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது குறித்து  பொதுமக்கள் ஜனநாயக முறையில்  தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த போது, கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த ஆதரவைத் தாம் நினைவு கூர்வதாக கேரள முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல, தற்போது பல மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், கேரளாவிலும், மாநில சட்டப்பேரவையில் உரிய விவா தத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட சில  சட்டமுன்வடிவுகள் ஆளுநரால் நீண்ட  காலமாகவும், அவற்றில் சில ஓராண் டிற்கு மேலாகவும் நிலுவையில் வைக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பின ராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்  கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, கேரள ஆளுநர் கேட்ட விளக்கங்களை அளித்தும் சட்டமுன்வடிவுகள் நிலுவை யில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களின் எண்ணங்க ளைப் பிரதிபலிக்கும் மாநிலச் சட்ட மன்றங்கள் நிறைவேற்றும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை நீண்டகாலம் நிலுவையில் வைப்பது என்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை நிராகரிப்பதற்குச் சமமா னது என்றும் பினராயி விஜயன் தமது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிப்பதில் காலதாமதம் செய்வதன் வாயிலாக, மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற  நாடாளுமன்ற ஜனநாயக மரபு மீறப்படு கிறது என்றும், அரசியலமைப்பில் ஆளு நருக்கு வரையறுக்கப்பட்டுள்ள விருப்பு ரிமை, குறுகிய வரம்புகளுக்குள் செயல்  படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர், அரசியல மைப்பை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 356-வது பிரிவைப் பயன்படுத்துவதும் ஒரு காலாவதியான கடிதமாக (dead letter) இருக்கவேண்டும் என்று கூறி யுள்ளதைத் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.   சட்டமன்றங்களில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள மாநில அரசு களை அகற்றுவதற்கு சட்டப்பிரிவு 356  மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது (பல முறை தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது) என்று குறிப்பிட்டுள்ள கேரள  முதலமைச்சர், அதற்கு எடுத்துக்காட்டு களாக 1959-ல் கேரளாவில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூ னிஸ்ட் அரசும், 1976 மற்றும் 1991-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும் கலைக்கப்பட்ட நிகழ்வுகளைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்  படுத்துவதைத் தடுத்து நிறுத்திட மேற்  கொள்ளும் அனைத்து முயற்சி களுக்கும் நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் பாது காவலர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்பு தல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பி டப்படவில்லை என்றாலும், அது நியாய மானதாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், பல  மாநிலங்களின் அனுபவத்தின் அடிப்ப டையில், அரசியலமைப்பின் செயல் பாட்டை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி எம்.என்.வெங்க டாசலய்யா ஆணையமும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம்.புஞ்சி ஆணையமும், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலவரம்பைப் பிரிவு 200-ல் குறிப்பிடப் பரிந்துரைத் துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் குறிப் பிட்டுள்ள பிரச்சனையில், தாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இந்த முன்மொழிவை மிகவும் தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் கேரள முதலமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

தமது கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி  ஒத்துழைப்பு நல்கிய கேரள முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில சுயாட்சி யை பறிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக  தமிழ்நாடும், கேரளாவும் பாரம்பரிய மான அரணாக இருந்து வருகின்றன. ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிரான அறப் போரிலும் வெற்றி பெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.