போதைப்பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத் தலை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் வலியுறுத்தினார். போதை மற்றும் சூதாட் டத்தை தடுக்க வலியுறுத்தி, திறந்தவெளி கருத்தரங்கம் மற்றும் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (பிப்ர வரி 27) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருகம் பாக்கம் பகுதிக்குழு சார்பில் வீடு இந்திய மாநாட்டிற்கு வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிதியை பெற்றுக் கொண்டு பெ.சண்முகம் பேசினார்.
“போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” திட்டம் தோல்வி
“’போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு தொடங்கி வைத் தார். அதன்பிறகு போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்னர். ஆனால், போதைப்பொருட் கள் கிடைப்பதில் எந்தவித தடையும் ஏற்படவில்லை. அரசாங்கத்தை விட போதை ப்பொருள் விற்பனையில் ஈடு படுபவர்கள் வலிமையும், செல்வாக்கும் மிக்கவர் களாக உள்ளனர்,” என்று சண்முகம் குறிப்பிட்டார். “குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்திலி ருந்து தான் போதைப் பொருள் இந்தியாவிற்கு வரு கிறது. இந்தத் துறைமுகத் தில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 கண் டெய்னர்களில் இருந்து 3.2 டன் ஹெராயின் கைப்பற்ற ப்பட்டது. பழவேற்காடு பகுதி யிலிருந்தும் அத்தகைய போதைப்பொருட்கள் கைப் பற்றப்பட்டன,” என்றார். சண்முகம் தொடர்ந்து பேசுகையில், “பாஜக ஆளும் மாநிலங்கள் வழி யாக பல மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப் படுகிறது. சென்னைக்கும் கடத்தி வரப்படுகிறது. சாக்லேட், மாத்திரை, ஊசி, மது, ஹெராயின், கஞ்சா என பல பெயர்களில் போதைப் பொருட்கள் விற்பனை யாகிக் கொண்டிருக்கின் றன. இவ்வளவும் செய்து விட்டு, பாஜக தலைவர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழகத் தில் குரல் கொடுக்கிறார் கள்,” என்றார்.
சிவராத்திரி விழா கார்ப்பரேட் வியாபாரம்
சண்முகம் தனது உரை யில், “சிவராத்திரியை உல களவில் ஒரு மாபெரும் கார்ப்பரேட் வியாபாரமாக மாற்றியவர் ஜக்கி வாசு தேவ். குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற அமைச்சர் கள் அவரை வந்து சந்தித்து செல்கின்றனர். இந்த ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார்,” என்று கூறினார். “மார்க்சிஸ்ட் கட்சியின் பல கட்ட போராட்டங்களுக் குப் பிறகு ஜக்கி வாசுதேவ் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. போக்சோ வழக்கு, கொலை வழக்கு, போதைப்பொருள் வழக்கு, நில மோசடி வழக்கு போன்றவை ஈஷா மையத்தின் மீது உள்ளன. இத்தனை வழக்குகள் இருந் தும் ஏன் ஜக்கி வாசுதேவை ஒருமுறை கூட கைது செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை
சண்முகம் நாடாளு மன்ற தொகுதி மறுவரை யறை குறித்தும் கவலை தெரிவித்தார். “1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப் படையில் தற்போது உள்ள 543 நாடாளுமன்ற மக்கள வைத் தொகுதிகள் மறுவரை யறை செய்யப்பட்டன. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங் கள் சிறப்பாக செயல்படுத் தின. இதனால் சில மாநிலங்க ளில் மக்கள் தொகை குறை ந்துவிட்டது. தற்போது மக்கள் தொகை அடிப்படை யில் தொகுதிகள் வரையறு க்கப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் மக்களவைத் தொகுதி களின் எண்ணிக்கை குறை யும்,” என்றார். “தமிழ்நாட்டில் தொகுதி களைக் குறைப்பதை ஒரு போதும் ஏற்க மாட்டோம். பிற மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தப்பட்டால் அதே விழுக்காட்டு அளவுக்கு தமிழ்நாட்டிலும் தொகுதி களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
காவல்துறையில் களையெடுத்திடுக
திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விமர்சித்த சண்முகம், “திருப்பரங் குன்றத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள நட வடிக்கையை எதிராக மிகப் பெரிய மதக் கலவரமாக மாற்ற திட்டமிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி முன் முயற்சி எடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, ஆட்சியரை சந்தித்து தலை யிட வைத்து கலவரம் நடை பெறாமல் தடுக்கப்பட்டது,” என்றார். “காவல்துறை உயர் அதி காரிகளும், தமிழ்நாடு அரசும் ஆழ்ந்த கவனம் செலுத்தி, காவல்துறையில் ஊடுருவி யுள்ள சங்பரிவார் கும்பலை, மதவெறி சக்திகளை, ஆதரவாளர்களை நீக்க வேண்டும்; களை எடுக்க வேண்டும். இல்லாவிடில், எத்தகைய பிரச்சாரங்களை செய்தாலும் அவற்றை அவர்கள் தவிடு பொடியாக்கிவிடுவார்கள். கடுமையான நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் களை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்க சாமி, சி.செங்கல்வராயன், எஸ்.ஆனந்தகுமார் உள்ளி ட்டோர் பேசினர். பகுதிக் குழு உறுப்பினர் எஸ்.கந்தன் நன்றி கூறினார்.