tamilnadu

img

மலை மக்களின் உறுதிமிக்க போராட்டம் மகத்தான வெற்றி!

திருப்பூர், ஜூலை 14 – திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு சாலை அமைக்கும் கோரிக்கையை, மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக் கொண்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மலைவாழ் மக்கள் உடுமலையில் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம் இதன் மூலம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை செட்டில்மெண்டுக்கு வன உரிமைச் சட்டப்படி 5.37 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை வசதி கோரி நீண்ட காலமாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர். வன  உரிமைக்குழு கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், தளி பேரூராட்சி யிலும் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அனைத்து நிர்வாக நடைமுறைகளும் செய்து முடிக்கப்பட்டது. எனினும் வனத்துறையினர் ஒப்புதல் அளிக்காமல் சாலை அமைக்க முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 12ஆம்  தேதி புதன்கிழமை முதல் உடுமலைபேட்டை யில் வனத்துறை அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி உடுமலை வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 18 செட்டில்மெண்ட்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து வியாழனன்று இரவு உடுமலையில் இருந்து புறப்பட்டு  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு வருவது, கோரிக்கை நிறை வேறும் வரை இங்கே போராட்டம் நடத்துவது என்று அவர்கள் முடிவு செய்தனர். எனினும் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து உடுமலையிலேயே காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக உடனிருந்து தலைமை ஏற்று வழிகாட்டி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.ச ண்முகம், விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவரும், தளி பேரூராட்சிமன்றத் துணைத் தலைவருமான கோ.செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மலைவாழ் மக்கள்  சங்க நிர்வாகிகளும், வன உரிமைக் குழு உறுப்பினர்களுமான மகேஸ்வரி, அம்சவேணி, விஜயா, வாணீஸ்வரி, விஜயா உள்ளிட்டோர் மற்றும் தளி பேரூ ராட்சித் தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை  நடத்து வதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்திற்கு வெள்ளியன்று நண்பகல் வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அரசுத் தரப்பில் மாவட்ட வன அலு வலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர், உடுமலை வருவாய் கோட்டாட்சி யர், வட்டாட்சியர் மற்றும் தளி பேரூராட்சி தனி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்கள் சார்பாகப் பேசிய பெ. சண்முகம், வன உரிமைச் சட்டம் 2006 இன்படி குருமலை செட்டில்மெண்ட் செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும். இதில் வேறு சலுகை கேட்கவில்லை. சட்டப்படி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நிர்வாகத் தரப்பில் இப்பிரச்சனை குறித்து அதிகாரிகள் கலந்து பேசினர். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், உடனடியாக மாவட்ட வன உரிமைக் கூட்டத்தைக் கூட்டி இதில் வன உரிமைச் சட்டம் 2006இன்படி, உள்கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான, சாலை அமைக்க சமுதாய உரிமை வழங்க தீர்மானம் நிறைவேற்ற ஏற்பாடு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும், வன உரிமைக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் கோ. செல்வன், சௌந்தரராஜன், மகேஸ்வரி ஆகியோரும் கையெழுத்து இட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குருமலைக்கு சாலை அமைக்கும் பிரச்சனையில் சுமூகத் தீர்வு எட்டப்பட்டது. மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோ.செல்வன் நன்றி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் கூறுகை யில், குருமலைக்கு சாலை அமைக்கும் பிரச்சனை 200 ஆண்டு காலமாக நீடிக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 75 ஆண்டு காலமாக இப்பிரச்ச னைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கிறது. வன உரிமைச் சட்டப்படி அனைத்து அம்சங்களும் தெளிவாக இருந்தும் இதுவரை நிறைவேறாமல் இருந்த இக்கோரிக்கை தற்போது நிறை வேற்றப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட  அதிகாரிகளுக்கு நன்றி. இக்கோரிக்கைக் காக உறுதிமிக்க போராட்டம் நடத்திய உடுமலை மலைவாழ் மக்கள் போராட்டத் துக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி இது. சுமூகத் தீர்வு காணப்பட்டதன் மூலம் இந்த மக்கள் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் நிறைவு பெறுகிறது. உடுமலைக்குச் சென்று அந்த மக்களிடம் தெரிவித்து போராட்டத்தை முடித்துக் கொள்வோம்.  இவ்வாறு அவர் கூறினார்.