சங்ககால பெண்களின் பண்பாட்டு சூழலை அறிய “சங்கப் பெண் கவிதை கள்” - சக்தி ஜோதி யின் நூல் கவிதை வழி சாட்சியாகும். வெள்ளி வீதியார் துவங்கி ஒளவையார் வரையிலான 45 சங்ககால பெண் கவிஞர்களை பற்றியும், அவர்களின் பாடல் களில் உள்ள ஆழமான பொருட் செறிவையும் எழுதாளப்பட்டுள் ளது. ஒவ்வொரு சங்க கால பெண்பாற் புலவர்களின் பாடல் களை எடுத்து, இப்பாடல்களில் உள்ளார்ந்து ஊடுருவிருக்கும் அக உணர்வுகளை ஒவ்வொரு கட்டுரையாக வேறுபடுத்தி காட்டி உள்ளார். அதன் நீட்சியாக சமகால பெண் கவிஞர்களின் கவிதை களையும் எடுத்து இணைத்திருப் பது சாலச் சிறந்தது. சங்ககாலத்தில் இருந்து பண்பாட்டுத் தொடர்ச்சியாக பெண்கள் அன்றும், இன்றும் நீண்டு கொண்டே வருகிறார் கள்.
சங்ககால நுண் அரசியல்...
சங்க கால வாழ்வியலை அகம், புறம் என பிரித்து, புற வாழ்வில் நிலத்தை ஆளூமை செய்வதும், அக வாழ்வில் பெண்ணை ஆளுமை செய்வதுமே ஆண் படைப்பின் நோக்கமாக புனையப்பட்ட கருத்தியல் சங்க இலக்கியம். நிலமும், பெண்ணும் வளமையின் குறியீடாகவும், அந்த வளமையை மேலாதிக் கம் செய்வது ஆணின் கடமை யாகவும் புனையப்பட்டதோடு மட்டுமல்லாமல், அந்த கற்பிதங் களை அவ்விதமாகவே பெண் கள் ஏற்றுக் கொண்டதாக அமைக்கப்பட்டது. இதுதான் சங்க இலக்கியத்தின் நுண் அர சியல் ஆகும். இதனை சமகால பெண் களின் சமூக பண்பாட்டு புரிதல் களை உள்வாங்கி சங்கப் பெண்களின் உளவியல் நீட்சி யாக இணைத்து பார்ப்பது இந்நூலின் புதுவிதமான அணு குமுறையாக சக்தி ஜோதி மேற் கொண்டு உள்ளார்.இதனை முனைவர் எல்.ராமமூர்த்தி குறிப்பிடுவது முக்கியமானது. ஒவ்வொரு கட்டுரையிலும் சங்கச் செய்திகளாக காதல், களவு, பருவ நிலைகள் பல்வேறு உணர்வு போக்குகளை விளக்கங் கள் ஆகவும், பெண் கவிஞர் களின் பற்றிய குறிப்புகளுடன், இப்பாடல்களின் கலைச் சொற் களுக்கான விளக்கங்களோடு சங்கப் பெண் கவிதைகளின் கள ஞ்சியமாக அமைந்துள்ளது.
சங்க பண்பாட்டு சூழல்...
சங்க கால சூழலில் பெண் களின் பண்பாட்டு சூழலை இப்புத்தகம் விரிவாக எடுத்து ரைக்கிறது. பெண் என்பவள் தாயாகவும் மனைவியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். பொருளாதார ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய அவ சியமும், பொருளாதார சார்பு நிலையும் அடிப்படையில் வடி வமைக்கப்பட்டுள்ள பண்பாட்டு சூழலும் இதனை வெளிப்படுத்து கிறது. உதாரணமாக நாளும் கிழ மையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண் களுக்கு இல்லை என்பார் எழுத்தாளர் கந்தர்வன். ஆனாலும் சங்க இலக்கி யத்தின் பண்பாட்டு மனம் வெளி என்பது ஆணுக்கும் இல் என் பது பெண்ணுக்கும் உரியதாக பெருங்கடுங்கோ பாடலின் மூலம் அறியலாம். “வினையே ஆடவர்க் குயிரே வானுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிரென நமக்குரைத் தோருந் தாமே, அழ அல் தோழி! அழுங்கு வர் செலவே.” ஒரு யா மரத்தை போல வற்றாத ஈரத்தை தனக்குள் வைத்திருக்கும் அவள் சிற்பம் செய்ய பயன்படுத்தப்படும் அம் மரத்தின் உறுதியை யும் தன்னகத்தை கொண்டவ ளாகவும் இருக்கிறாள்.
இயற்கை உணர்வு...
உயிர்கள் அனைத்தையும் தானே பெற்றெடுத்திருப்பதாக கருதுகிறாள். ஒர் உயிர் உருவாகி வளர்கிற காலத்தின் மதிப்பினை அவள் அறிவாள். எனவே போரினை விரும்பாதவளாக தான் பெண் இருப்பாள். சங்க காலம் என்பது காதலும் போருமாக இணைந் திருந்த வாழ்வாகும். அதே நேரத்தில் ஒக்கூர் மாசாத்தியார் பாடலில் வரும் காட்சி தந்தை யானையை வென்று இறந்து விடுகிறான். கணவன் பசு கூட்டத்தை வென்று இறந்து விடுகிறான். போர் முரசு கேட்கிறது சிறுவனை வெள்ளாடை உடுத்தி வேலினை தந்து போருக்கு அனுப்புகிறார் தாய். ஒருபுறம் உயிர் வளர்ப்பதால் போரை வெறுப்பவளாகவும்,வீர உணர்வை பயிற்றுவிக்கும் தாயாகவும் இருப்பது சங்க காலத்தின் முரணாகும். இன்னும் கைம்பெண், தாய், மனைவி,காதலி, தோழி என ஒவ்வொரு பெண்ணும் சங்க காலத்தில் வாழ்ந்த வாழ்வி யலை ஒவ்வொரு கவிஞர்கள் மூலமாக எடுத்து வைத்திருப்பது மிகச் சிறப்பானதாகும். சங்க கால பெண் கவிஞர் களை பற்றிய குறிப்புகளும், பாடல் பற்றிய விவரங்களும் ஆய்வு நூலுக்குரிய தன்மை யுடன் அமைந்துள்ளது.
சங்கப் பெண் கவிதைகள்
ஆசிரியர் : சக்தி ஜோதி
வெளியீடு :
சந்தியா பதிப்பகம்,
சென்னை.
044 24896979
விலை ரூ.400.