சென்னை, அக். 29 - ‘தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக் கென ரூ. 7,500 கோடி மதிப்பில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெரும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. 5 ஆண்டுகளில் செயல்படுத்தப் படும் இத்திட்டத்தில் முதற்கட்ட மாக ரூ. 2 ஆயிரத்து 497 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டிலும் ரூ. 1,000 கோடி மதிப்பில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப் படும்’ என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்ட மாக நடப்பு கல்வியாண்டு 440 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 3 ஆயிரத்து 32 கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை கள், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் அமைப்ப தற்கு ரூ. 745 கோடியே 27 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி அரசாணை பிறப்பித்துள்ளார். நபார்டு வங்கியின் ரூ. 633 கோடியே 48 லட்சத்து 16 ஆயிரம் கடன் உதவி மற்றும் அரசின் ரூ. 111 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரம் நிதி ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.