tamilnadu

img

திருப்பதி லட்டும் பழனி பஞ்சாமிர்தமும் - மதுரை சொக்கன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு களின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இது  மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு ஒன்றை ஆந்திர அரசு அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்த தோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தி லும் பொதுநல வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. எந்தவொரு உணவுப்பொருளிலும் கலப்படம் என்பது கண்டிக்கப்பட வேண்டியது. திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப் படம் இருந்திருந்தால் அதைக் கண்டு பிடித்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் மற்றும் அவர்களின் கூட்டாளி கள் தங்களுடைய குறுகிய அரசி யலுக்கு இதை பயன்படுத்த முயல்கின்ற னர். அதிலும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதை லட்டு கலப்படத்தோடு இணைப்பதற்குக் கூட துணிந்துள்ளனர். மறுபுறத்தில் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு சொந்தமான நெய் கம்பெனிக்கு ஆர்டர் பிடிப்பதற்கு செய்யப்பட்ட வேலை இது என்ற பேச்சும் எழுந்தது. ஒடிசா மாநில தேர்தலின் போது பூரி ஜெகநாதர் ஆலய கருவூல சாவி களைத் திருடி தமிழ்நாட்டுக்கு கொண்டு போய்விட்டதாக பிரதமர் மோடியே குற்றம்சாட்டினார். ஆனால் அது முற்றி லும் பொய் என்பது நிரூபணமாகி விட்டது. இப்போது அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதனிடையே சங்கி ஒருவர், தென்னிந்தியா என்பதால்தான் அமைதியாக இருக்கிறார்கள்; இதுவே  வடக்கில் நடந்திருந்தால் என்ன நடக்கு மென்றே கூற முடியாது என கொளுத்திப் போட்டிருக்கிறார். மிகப் பெரிய விளம்பரத்துடன் கட்டப்பட்ட அயோத்தி பாலராமர் கோவில் மேற்கூரை ஒழுகுவதாக செய்தி வந்த போது இவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை.  திருப்பதியில் பரிகார பூஜையும்  வழக்கமான பாணியில் நடத்தப் பட்டுள்ளது. லட்டின் புனிதத்தை மீட்டு விட்டோம் என திருப்பதி கோவில் தலைமை பூசாரியே தெரிவித்து விட்டார். லட்டு விற்பனையும் குறைய வில்லை. கடந்த 19 தேதி முதல் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 16லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகியுள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு 3லட்சத்துக்கு மேல் லட்டு விற்பனையாகியுள்ளது.  ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உண்ணாவிரதம் இருந்து, கோவில்களை சுத்தம் செய்து  தனியாக பரிகாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில் ஹைதராபாத்தில் மெய்யழகன் பட திரைப்பட விழா விற்காக நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒருவர் திருப்பதி லட்டு குறித்து நடிகர் கார்த்தியிடம் கேள்வி எழுப்ப ‘இப்போது லட்டு பற்றி பேச வேண்டாம். இது சென்சிடிவான டாப்பிக். இதனைப் பற்றி பேசவிரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.இதற்கே பவன் கல்யாண் கொதித்து கொந்தளித்துவிட்டார். லட்டு பற்றி காமெடி செய்ய வேண்டாம். லட்டு சென்ஸ்சிடிவான விசயம் என்று ஒருவர் கேலி செய்துள்ளார். இதற்கு கூட பதில் சொல்லமாட்டீர்களா என உசுப்பிவிட்டுள்ளார். 

இதனால் பயந்து போன நடிகர் கார்த்தி ‘எதிர்பாராத வகையில் நடந்த தவறான புரிதலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் வெங்கடேஸ்வராவின் பக்தர்’ என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். இதற்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.  சென்சிடிவான விசயமென்று பதில் சொல்லாமல் கடந்து போனதற்கே மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு பவன் கல்யாணின் மிரட்டல் இருந்துள்ளது. பவன் கல்யாண் மிதமிஞ்சிப் பேசி வருகிறார். லட்டு சர்ச்சை வந்தவுடன் இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது; சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ‘‘பவன் அவர்களே, நீங்கள் துணை  முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இது நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு தேவை யற்ற அச்சத்தை பரப்புகிறீர்கள். இந்தப் பிரச்சனையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்க வேண்டிய அவசிய மில்லை. நாட்டில் போதுமான வகுப்பு வாத பதற்றங்கள் உள்ளன (மத்தி யில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)’’ என்று தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் கூறியிருந்தார்.

உடனே பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ் மீது பாய்ந்தார். “இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து பேசுவது தவறா? திருப்பதியில் நடந்தது போன்று மசூதியிலோ, தேவாலயத்திலோ நடந்தால் இப்படி பேசுவார்களா? மனம்  புண்பட்டாலும் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டுமா?” என்றெல்லாம் தேவையில்லாமல் பேசி பதற்றத்தை யும், மக்களிடையே மோதலையும் ஏற்படுத்த பவன் முயல்கிறார். இதற்கும் கூட பிரகாஷ் ராஜ் பக்குவமாகவே பதி லளித்துள்ளார். “நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டி ருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் இப்போது வெளிநாட்டில் இருப்ப தால் நேரில் வந்து விரிவாக விளக்க மளிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனிடையே லட்டு பாவங்கள் என்ற பெயரில் கோபி, சுதாகர் தங் களது யுடியூப் சேனலில் வீடியோ வெளி யிட்டிருந்தனர். அது நகைச்சுவைக் காக எடுக்கப்பட்டிருந்தாலும் தங்களது யுடியூப்பிலிருந்து அதை நீக்குவ தாகவும் யாருடைய மனதையும் புண் படுத்துவது தங்களது நோக்கமல்ல என்றும் கோபி, சுதாகர் கூறியுள்ளனர். அவர்களுக்கு என்ன நெருக்கடி தரப் பட்டது என தெரியவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் நீக்கப்பட்ட அந்த வீடியோ தீயாய்ப் பரவி வருகிறது. ஒருபுறத்தில் திருப்பதி லட்டு உருட்டப்பட்டுக் கொண்டிருக்க, மறு புறத்தில் பழனி பஞ்சாமிர்தத்தை சிலர்  பிசையத் துவங்கினர். பாஜக பொறுப்புத் தலைவர் எச்.ராஜா திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்யும் திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம்தான்; பழனி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் கொடுத்துள்ளது; அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று புது பிரச்சனையை எழுப்பினார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு தாங்கள் மட்டுமே நெய் கொடுக்க வில்லை என்றும் பலரும் கொடுத்துள்ள னர் என்றும் தாங்கள் கொடுத்துள்ள நெய் குறித்து எத்தகைய தர பரிசோத னைக்கும் தயார் என்றும் ஏ.ஆர்.நிறு வனம் கூறியது. மேலும் பழனி கோவி லுக்கு தாங்கள் நெய்வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பழனி  கோவிலுக்கு தமிழக அரசுக்கு சொந்த மான ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே தரமான நெய் வாங்கப்படு கிறது என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் தவறான தகவலை பரப்பி யதற்காக எச்.ராஜா மன்னிப்புக் கேட்க வில்லை. தனது கருத்தை மாற்றிக் கொண்டதாகக் கூட தெரிவிக்க வில்லை. அத்தகைய பழக்கமும் அவருக்கு இல்லை. இதைவிட மோசமாக திரைப்பட இயக்குநர் என்று தன்னை கூறிக் கொள்ளும் மோகன். ஜி, பழனி பஞ்சா மிர்தத்திலும் கலப்படம் உள்ளது; பஞ்சா மிர்தத்தில் ஆண்மைக் குறைவை உரு வாக்கும் மருந்தை கலந்துள்ளனர் என்றெல்லாம் அவதூறு செய்தார். பழனி கோவிலின் புனிதத்தை இழிவுபடுத்தினார். திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன். ஜியை  கைது செய்தனர். ஆனால் நீதிபதி, கைது செய்த விதம் சரியில்லை என்று கூறி ஜாமீனில் விடுவித்துள் ளார். தற்போது பழனியிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தத்தை இழிவு செய்ததாக மோகன். ஜி மீது சங்கிகள் பாயவில்லை. மாறாக அவர் மீது கை  வைத்தால் நடப்பதே வேறு என வழக்க மான வாய்ச்சவடாலில் ஈடுபடுகின்ற னர். பாமக தலைவர் அன்புமணி மோகன். ஜி என்ன தீவிரவாதியா என வக்காலத்து வாங்குகிறார்.

பழனி கோவில் குறித்து அவதூறு  பரப்பினால் ஏன் பாஜக மற்றும் அதன் பரிவாரங்களுக்கு கோபம் வருவ தில்லை. ஏனென்றால் கோவில்களை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்; அரசு கோவில்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றனர். திருப்பதி மற்றும் பழனி கோவில் சர்ச்சைகளை பயன்படுத்தி இப்போது இந்த கூச்சலை அதிகப்படுத்தியுள்ளனர். தனியார் கோவில் எனப்படும் சிதம்பரம் கோவில் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தக் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை புகார் தெரிவித்துள்ளது. திருப்பதி, பழனி, சிதம்பரம் என அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் உண்மை ஓரளவு பிடிபடும்.