tamilnadu

img

திருநெல்வேலி முக்கிய செய்திகள்

புதிய வரி விதிப்பிற்கு எதிர்ப்பு :  அனைத்துக் கட்சிகள், வியாபாரிகள் ஆணையரிடம் மனு!

திருநெல்வேலி ,ஆக 21- அம்பாசமுத்திரம் நகராட்சியில் புதிய வரி விதிப்புக்கு அனைத்துக் கட்சிகள், வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிதாக வரி விதிப்பு செய்யும் வகையில் கட்டடங்களை அளவீடு செய்யும் பணியில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளன ர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர்  சுரேஷ் தலைமை வகித்தார். முத்துச்சாமி, மைதீன்கான் (மதிமுக), காஜாமுகைதீன் (திமுக), வடிவேல் மூர்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்), முருகேசன் (காங்கிரஸ்), நாசர் (எஸ்.டி.பி.ஐ), விஜய் (தேமுதிக), ஹரிராம், மணிகண்டன் (பாஜக), வியாபாரிகள் சங்கம் சார்பில் காந்தி, சுப்புராம், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பும் வெளியிடாத நிலையில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை நகராட்சிப் பணியாளர்கள் அளவீடு செய்வதை கைவிட வேண்டும். புதிதாக வரி விதிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய வரி விதிப்பைக் கைவிட வலியுறுத்தி அனைத்துக் கட்சி மற்றும் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் நகராட்சி ஆணையர் ஜின்னாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

சண்டிகர்  சென்ற நெல்லை சி.ஆர்.பி.எப். வீரர் மாயம்  

நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல்

திருநெல்வேலி, ஆக. 21- சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய் யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த சி.ஆர். பி.எப். வீரரான தனது கணவர் குறித்த தக வல் தெரியாததால் பாளையங்கோட்டையை சேர்ந்த அவரது மனைவி  தெய்வகனி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது : எனது கணவர் அண்ணாத்துரை மகாராஷ்டி ராவில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையில் பணி புந்தார். மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப்  மாநிலம் சண்டிகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யபட்டார். பணியிட மாற்றம் செய்யபட்ட நிலையில் 20 நாட்கள் விடுமுறை எடுத்து திருநெல்வேலி வந்தார். 20 நாட்கள் விடு முறை முடிந்து ஜூன் 29 ஆம் தேதி திருக் குறள் ரயிலில் சண்டிகர் சென்றார். ஜூலை 1 ஆம் தேதி டெல்லி வந்துவிட்டதாக போனில் பேசினார். ஜூலை 2 ஆம் தேதி வாட்ஸ் ஆப்பில் பேசினார். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 2 ஆம் தேதி தில்லியில் இருந்து எஸ்.ஐ.பிரோத் குமார் என்னை போனில் தொடர்பு கொண்டு தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளது ஆனால் கணவர் வரவில்லை என தகவல் கூறினார். எனது கணவர் எங்கு உள்ளார் என்ற தகவல் தெரி யாததால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுடனும்,கவலை யுடனும் உள்ளோம். எனவே சிஆர்பிஎப் பாது காப்பு படையில் பணிபுரியும் எனது கண வரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தர விடுமாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது.அப்போது மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

 சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும்  

நெல்லை ஆட்சியர் ஷில்பா தகவல்

திருநெல்வேலி, ஆக. 21- நெல்லை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் ஷில்பா தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை வளர்ச்சி மற்றும் கால்நடை உற்பத்திக்கு தீவனம் இன்றியமையாததாகும். தீவன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகை யில் அரசு மானியம் வழங்குகிறது. 2020-2021-ம் நிதியாண்டில் நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தீவன சோளம், வேலிமசால் 270 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. தீவன சோளம் கோ-4, 130 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. மானாவாரி யில் சோளம் மற்றும் தட்டைப் பயிறு 1900 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. விவ சாயிகளுக்கு எந்திர புல்வெட்டும் கருவி 75 சதவீத மானியத்துடன் 95  எண்ணம் வழங்கப்பட உள்ளது.  எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்த பய னாளிகள் பயன்பெற இயலாது. பயிரிடப்படும் நிலம் சொந்தமாக வோ, குத்தகையாகவோ வைத்தி ருக்க வேண்டும். 2 முதல் 5 கால்நடை கள் வளர்ப்போராக இருத்தல் வேண்டும். பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இலவச வெள்ளாடு, செம்மறியாடு வழங் கப்படும். இதில் சிறு, குறு விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கிளை துவக்கம்

நாகர்கோவில், ஆக.21- கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் சங்க (சிஐடியு) ஆலஞ்சி கிளை துவக்க நிகழ்ச்சி யும், ஆட்டோக்களுக்கு சங்க ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கிளை தலை வர் கனகராஜ் தலைமை  வகித்தார். செயலாளர் அஜித்குமார் முன் னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் பொன்.சோபன ராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி வளன்பாபு, முருகே சன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனங்கள்  தனிப்படை ரோந்து பணி துவக்கம்

தூத்துக்குடி,ஆக. 21- தூத்துக்குடி மாவட்டத்தில் பிரிகேட் என்னும் இரு சக்கர வாகனங்கள்  தனிப் படை ரோந்து பணியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசால் ‘பிரிகேட்” (Brigade)  என்று பெயர் சூட்டப்பட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 16 புதிய இரு சக்கர புதிய வாகனங்கள்  ஒதுக்கப்பட்டு, அதில் அவசர ஒலிப்பான் (Siron), ஒளிரும் விளக்குகள் (Flas hing light), சிறிய ஒலி பெருக்கி (Public Address System) ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதா னத்தில் பிரிகேட் இரு சக்கர வாகன ரோந்து தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.