தூத்துக்குடியில் வரலாற்றில் முதல் முறையாக 40,000 டன் உப்பு இறக்குமதி
மிரட்டும் காலநிலை மாற்றம் : பொய்த்த உப்பு உற்பத்தி
தூத்துக்குடி, ஏப்.19- தமிழ்நாட்டின் உப்புத் தொழிலின் முக்கிய மையமாக விளங்கும் தூத்துக் குடி வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்கிறது. குறிப்பாக தூத்துக்குடி பாரம்பரியமாக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், கேரளா, ஆந்தி ரப்பிரதேசம், தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களுக்கு உப்பு சப்ளை செய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி உப்பு தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்றது ஆகும். இந்நிலையில், கடந்த வாரம் குஜ ராத்தில் இருந்து 40,000 டன் உண வுக்கான உப்பு வ.உ.சி. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு காரணம் தூத்துக்குடி கடற்கரை பகுதி யில் நிலவும் அசாதாரண வானிலை நிகழ்வுகள் தான். திடீரென மழை, வானம் மேக மூட்டத்தால் வெயில் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் உப்பு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜ ராத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 40,000 டன் உணவுக்கான உப்புகளை வைத்து சமாளிக்க உப்பு ஏற்றுமதியா ளர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உற்பத்தியில் 60% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், குஜராத்தில் இருந்து கொண்டு வரப்படும் உப்பின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. உப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறு கையில்,”உப்பு வயல்களில் உப்பு தண்ணீர் (brine) வைக்கப்பட்டு, வெயி லில் ஆவியாகும் நிலையில் மழை பெய்தால், அது உப்பு தண்ணீரை நீர்த்துப்போகச் செய்து உப்பு விளைச் சலை கடுமையாக குறைக்கிறது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் 2024இல் அசாதாரணமான கனமழை ஆகியவை உப்பு வயல்களுக்கு கடுமையான சேதம் விளைவித்ததால் உற்பத்தி குறைந் துள்ளது. மேற்கண்ட காரணங்களால் 2024இல் சராசரி உற்பத்தியில் 40% மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் பெரும் பாலான உப்பளங்கள் பயன்படுத்தப் பட்டுவிட்டன. இதனால் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுவாக பிப்ரவரியில் இருந்து உப்பு சேகரிப்பு பணி தொடங்கும், ஆனால் தொடர்ச்சியான மழை காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் வரை உப்பு சேகரிக்க முடியவில்லை” என அவர் கூறினார். உப்பு உற்பத்தி காலம் குழப்பத்தில்... உப்பு ஏற்றுமதியாளர் ஜான் பிரபாகர் என்பவர் கூறுகையில்,”உற்பத்தி குறை வாக இருப்பதால் உப்பு விலை கணிச மாக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு டன் உப்பின் விலை ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை உள்ளது. இது மிகவும் அதிகம். குஜ ராத்தில் இருந்து ஒரு டன் உப்பு ரூ. 4,000 முதல் ரூ.4,500 வரை கொண்டு வர முடியும். அதனால் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கால நிலை மாற்றம் காரணமாக மழை முறை மாறியுள்ளது. மேலும் முக்கிய உப்பு உற்பத்தி காலம் இப்போது குழப்பத்தில் உள்ளது” என அவர் கூறினார். தூத்துக்குடி உப்பு உற்பத்தியா ளர்கள் சங்க செயலாளர் தென்ராஜ் கூறுகையில்,”குஜராத் கண்ட்லா துறை முகத்தில் இருந்து வரும் உப்பு ஒரு டன்னுக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ. 4,000 மட்டுமே செலவாகிறது. குடும்ப மற்றும் தொழிற்துறை பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச ஓட்டம் உப்பு (free-flow - கடல் நீரின் ஆவியாதல் அல்லது உப்புச் சுரங்கங்கள் அல்லது ஆழமற்ற குளங்கள் அல்லது உப்பு நீரின் கனிமங்கள் நிறைந்த ஊற்று நீரிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது) மற்றும் படிக உப்பு குஜராத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த விலை வியா பாரிகளுக்கு மறுபேக்கிங் செய்து பிற பகுதிகளுக்கு விற்பனை செய்ய ஏற்றது. வ.உ.சி.துறைமுகத்தில் மொத்த அளவி லான உப்பு மற்றும் 25 கிலோ, 50 கிலோ பைகளில் உப்பு இறக்கப்படுகிறது. குஜ ராத்தில் இருந்து பல்வேறு வகையான தொழிற்துறை உப்புகள் கொண்டு வரப்பட்டன, ஆனால் இந்த முறை முதன் முறையாக உணவுக்கான உப்பு கொண்டு வரப்படுகிறது” என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியாளர் எச்சரிக்கை தூத்துக்குடியில் ஒரு டன் உற்பத்தி செலவு ரூ.2,000 முதல் ரூ. 2,500 வரை இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் உப்புத் தொழில் மீண்டும் உயிர் பெறும். மேலும் இது காலநிலை காரணிக ளின் கைகளில் உள்ளது. இல்லை என்றால் உப்பு உற்பத்தி பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று ஏற்றுமதி யாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.