மயிலாடுதுறை, ஜன.19 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் அருகே யுள்ள திருமெய்ஞானத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூ ரான் 43 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று கடைப்பிடிக்கப் பட்டது. அக்கிராமத்தில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 1982 ஆம் ஆண்டு ஜன.19 அன்று நடந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் போது, அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசின் காவல் துறை கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருமெய்ஞானம் கிராமத் தைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான் ஆகிய இருவரும் துப்பாக்கிக் குண்டை நெஞ்சில் தாங்கி வீர மரணமடைந்தனர். அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவு தின கடைப்பிடிப்பும், பொதுக் கூட்டமும் நடைபெறும் நிலை யில், ஞாயிறன்று மாலை திருமெய்ஞானத்தில் நினைவு தின நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.அம்மை யப்பன், டி.ஆர்.ராணி, பி. குணசுந்தரி, எம்.ஐயப்பன், செல்வபாக்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.சிம்சன் வரவேற்று பேசினார். கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் ஏற்றி வைத்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, நாகை மாவட்டச் செயலாளர் வீ. மாரிமுத்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், வாலி பர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எஸ்.துரைராஜ், திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.பி.ஜோதிபாசு, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மாநிலச் செயலாளர் கே.அருட்செல் வன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், ப.மாரி யப்பன், சி.விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ், அமுல்காஸ்ட்ரோ, டி.ஜி.ரவிச்சந்திரன் உட்பட மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயி கள்-விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர், மாதர் சங்கத்தினர், தொழிற்சங்க பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள் ஏராளமானோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உரையாற்றினார். கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.