புதுச்சேரி,நவ.17- புதுச்சேரி அய்யா மாரி யப்பனார்-சுந்தரம்மாள் அறக் கட்டளை வழங்கும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருதுக்கு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, புதுவை ராஜ ராஜேஸ்வரி மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யுவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்கி கவுரவித்தார். சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.விருது பெறும் ஸ்டாலின் அபிமன்யு, ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கக்கூடிய நீதிமன்றங்கள் மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்ற உயரிய நோக்கோடு வழக்குரைஞராகப் பதிவு செய்த நாள் முதல் இன்று வரை செயல் பட்டுக் கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர். புதுவையில் உள்ள முறைசாராத் தொழி லாளர்கள் உரிமைகள் பாதிக்கப் பட்ட போதும், பட்டியலின மக்க ளின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படும் போது அவர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களின் உரிமைகளை பாதுகாத்துத் தந்தவர். புதுவையில் 38 ஆண்டு களாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்து வதற்கு சென்னை உயர்நீதிமன்ற த்தில் வாதாடி தேர்தலை நடத்த வழி வகுத்தவர். இவர், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழக்கு ரைஞராகவும், புதுச்சேரி அரசின் வழக்குரைஞராகவும் பணியாற்றி யுள்ளார். அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவின் பிரதிநிதியாக அந்நாட்டு நீதி மன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றியும் இந்திய நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றியும் ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக, அமெரிக்க சென்று ஆய்வு செய்துள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் வழக்குரைஞராக (Additional Government Pleader) பணியாற்றி வருகிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் சட்டம் எனும் பேராயுதத்தை பயன்படுத்தி, மக்களின் நலன் காத்து வரும் இவரின் செயல்பாடுகள் போற்றும் வகையில் இவருக்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது வழங்குவதில் பெருமைப் படுகிறோம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.