மதுரை, செப். 9 - ஊடக உலகில் உண்மை யின் பேரொளியாம் தீக்கதிர் நாளிதழ் தனது 5வது அச்சுப் பதிப்பை, மகாகவி பாரதி உள்ளிட்ட மகத்தான சுதந்திர போராட்ட வீரர்கள் களம் கண்ட திருநெல்வேலியில் பெருமிதத்துடன் துவக்கு கிறது. செப்டம்பர் 22 அன்று திருநெல்வேலி பதிப்பு துவக்கவிழா, மாலை 5 மணி யளவில் பாளையங் கோட்டை லூர்துநாதன் சிலை அருகில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று, திருநெல்வேலி பதிப்பின் முதல் பிரதியை வெளியிடு கிறார். தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முக மது, க.கனகராஜ், என்.பாண்டி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்கின்றனர்.