tamilnadu

img

மயிலாடுதுறை : மழை பாதிப்புகளை பார்வையிட்ட சிபிஎம் எம்எல்ஏக்கள்

மயிலாடுதுறை, நவ.14-  மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத அதீத கனமழையால் ஒட்டுமொத்த சம்பா நெற்பயிர்களும் வெள்ள நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இந்நிலையில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை  மாலி (கீழ்வேளூர்), எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை) ஆகியோர் மாவட்டம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் தேவைகள் குறித்தும், பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் வி.சுப்ரமணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத்தலைவர் டி.சிம்சன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன்,கே.பி.மார்க்ஸ், சி.விஜயகாந்த்,கே.அசோகன், டி.ஜி.ரவி, கே.கேசவன்,மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சரவணன், கண்ணகி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செல்லப்பன், விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் அ.ராஜேஷ், வழக்கறிஞர் ஞானபிர காசம், புளியந்துறை ஊராட்சி தலைவர்  நேதாஜி, வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பி னர் எஸ். கபிலன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.மயிலாடுதுறையை அடுத்துள்ள  கீழமருதாந்தநல்லூர், பனீர்தலைமேடு, மேலமருதாந்தநல்லூர், ஜவகர்நகர், பொன்வாசநல்லூர் பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த 750 ஏக்கரில்  300 ஏக்கரு க்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள்  அழுகி நாச மாகியுள்ளதை சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி பாதிப்புகளை கேட்டறிந்தனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் புளியந்துறை, தர்காஸ், பழையாறு,புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், நல்லூர் ஆகிய பகுதிகளில் மூழ்கியுள்ள பகுதிகளையும்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். சீர்காழி கரைமேடு,புதுத்துறை,திருவாலி,திருநகரி,மங்கைமடம் பகுதிகளில் ஆயிரம்  ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

வீடுகள் இடிந்து நிர்க்கதியாய்...

சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில்  பல்லாயிரக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் நிர்க்கதியாய் நிற்கின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்து திரும்பும் திசையெல்லாம் கடல்போல காட்சியளிக்கிறது. ஏராளமான முகாம்களை திறந்திருப்ப தாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்தா லும், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட வந்து பார்க்கவில்லை. குறிப்பாக புளியந்துறை, புதுத்துறை பகுதிகளில் முகாம்கள் திறக்கவில்லை என்றும், கஞ்சி காய்ச்சி சாப்பிடக்கூட வழியில்லை என்றும் கண்ணீரை சிந்தியவாறு    சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெண்கள் கூறிய காட்சி அனைவரையும் கலங்க வைத்தது. ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு வந்து பாதிப்புகள் குறித்து முறையிட்டும், கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். செம்பனார்கோவில்  அருகேயுள்ள தலைச்சங்காடு, அப்பராசப்புத்தூர், பூந்தா ழை, திருக்கடையூர், சீதைசிந்தாமணி,டி.மணல்மேடு, குத்தாலம் சேத்தூர்,பெரம்பூர் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.

உணவு வழங்கும் சிபிஎம்

ஆக்கூர் அருகேயுள்ள அப்பராசப்புத்தூ ரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டும் எந்தவித நிவாரண உதவிகளையும் அரசு சார்பில் வழங்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியம் சார்பில் ஒன்றியச் செயலாளர் மார்க்ஸ் தலைமையில் உணவு சமைத்து அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அதீத கனமழை யால்  மூழ்கியுள்ள பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய போது.... வரலாறு காணாத கனமழையால் மாவட்டம் முழுவதும் 90 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி அழுகி விட்டன.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  திரும்பும் திசையெல்லாம்  வெள்ளக்காடாக கடல்போல காட்சியளிக்கிறது. சம்பா பயிர்கள் முற்றிலும் அழுகி நாசமாகிவிட்டது. வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் இன்னமும் வடியா மல் மக்கள் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமென அறிவிக்க வேண்டும்.  உடனடியாக நிவாரண உதவி களை அனைத்து பகுதிகளுக்கும் செய்ய வேண்டும். மூழ்கி அழுகியுள்ள சம்பா பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணமும், கூலித் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு 10 ஆயிரம் நிவாரணமும், உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணமும்  அரசு உடனடியாக வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுப்பொருள் உரங்களை வழங்க வேண்டும், வெள்ளநீர் வடியாத பகுதிகளில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தர வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசார்புக்கூட (கிராம உதவியாளர்) வந்து பார்க்கல. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எங்களை பார்க்க வந்து ஆறுதல் கூறி பாதிப்பு குறித்து கேட்டறிந்தது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு என கைகூப்பி  புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறியது நெகிழ்வாக இருந்தது.