tamilnadu

img

பாஜக ஆட்சியை அகற்றினால் மட்டுமே இந்திய நாட்டைக் காக்க முடியும்!

காங்கிரஸ் தலைவர்  ப. சிதம்பரம் பரப்புரை மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் இந்தியா கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து  ஒன்றிய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் தேர்தல் பரப்புரையை மத்திய சென்னை யில் இருந்து துவக்கினார்.  மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பா ளர் தயாநிதி மாறனை ஆதரித்து தங்கசாலை யிலும், வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்குகள் கேட்டு பெரவள்ளூர் சதுக்கத்திலும், திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்திலும், தென்சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் த‌. சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனுக்கு வாக்கு கள் கேட்டு  மயிலை மாங்கொல்லையில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் ப. சிதம்பரம் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண் டார். இந்தப் பரப்புரையின் போது அவர் பேசியதாவது: பாஜக - அதிமுக ஆட்சியில் எந்த நன்மையும் இல்லை தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து  ஆட்சி செய்த அதிமுக-வும் ஒன்றிய அதி காரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கும் பாஜகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. வேலையின்மை, விலைவாசி உயர்வால் பாதிக்காத குடும்பங்களே கிடையாது.  சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை யில், இந்தியாவில் 35 விழுக்காடாக இருந்த வேலையின்மை கடந்த சில ஆண்டுகளில் 65 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

42 விழுக்காடு பட்டதாரி மாணவர்கள், ஐஐடி-யில் படித்த 30 விழுக்காடு மாண வர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சரி யான திட்டமிடல் இருந்தால் வேலையின்மை யை ஒழிக்க முடியும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அடுத்த ஒரு வருடத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 2 திசையில் இருந்தும்  அம்பு எய்தும் சூழ்ச்சி பாஜக - அதிமுக ஆகிய இரண்டு அணிகள் நம்மை எதிர்க்கிறார்கள் என்று மேலெழுந்த வாரியாக பார்க்கும் பொழுது தோன்றும். இரண்டு அணிகளும் ஒன்று தான். ஒரே அணி தான். காரணம் இல்லாமல் இரண்டு அணி களாக பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். காரணத்தோடுதான் அவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அதிமுக மேடைகளில் பாஜகவை பழனிசாமி விமர்சிப்பது கிடையாது. பாஜக மேடையில் அதிமுகவை விமர்சிப்பது கிடை யாது. இரண்டு திசையில் இருந்து அம்பை  எய்கிறார்கள் ஒழிய, அந்த இரண்டு அம்பு களும் நம் (இந்தியா கூட்டணி) மீதுதான் பாய்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இந்துக்கள்  இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை வளர்ப்பது, கிறிஸ்தவ தேவாலயங்களை சூறையாடுவது, மசூதிகளை, கல்லறை களை இடிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். வட  மாநிலங்கள் கலவர பூமியாக மாறியிருக் கின்றன.  எனவே, ஜனநாயகம், அரசியலமைப்பு சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்- அனைத்து மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும் என்றால் சர்வாதிகார போக்கு டன் செயல்படும் பாசிச பாஜகவையும், அதற்கு துணை போகும் கட்சிகளையும் இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.