tamilnadu

நாகை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம், ஜன.29- தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு சிபிஐ(எம்) நாகை மாவட்டக் குழு அலு வலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஐஎம் மாநில குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பி.நாகைமாலி தலைமை தாங்கினார். தீக்கதிர் நாளித ழுக்கான 228 ஆண்டு சந்தாவும், 156 அரை யாண்டு சந்தாவுக்கும் உரிய தொகை ரூபாய் 619800 மற்றும் செம்மலர் 211க்கான ஆண்டு சந்தா தொகை ரூபாய் 56970.மார்க்சிஸ்ட் 216க்கான ஆண்டு சந்தா தொகை ரூபாய் 34560 ஐ கட்சியின் நாகை மாவட்ட செய லாளர் வீ. மாரிமுத்து திருச்சி தீக்கதிர் மேலா ளர் எஸ். பன்னீர்செல்வத்திடம் வழங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப. சுபாஷ் சந்திரபோஸ், ஏ.வேணு, என்.எம்.அபூபக்கர், வி. அம்பிகாபதி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைக் கமிட்டி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.