அக்டோபர் 7 இல் இருந்து இஸ்ரேல் காசாவை தகர்க்க ஆரம்பித்தது முதல் இதுவரை குறைந்தது 4324 ஏதுமறியாத அப்பாவிக் குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 100 குழந்தைகள் வீதம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது 2019 லிருந்து உலகம் முழுவதிலும் நடைபெற்று ள்ள போர்கள், மோதல்களில் கொல்லப் பட்டுள்ள மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். மேற்கத்திய ஊடகங்களும் மற்ற நாடுகளின் ஊடகங்களும் பாலஸ்தீன ஆதர வாளர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுக்கின்றனர். பாலஸ்தீன ஆதர வாளர்களிடம் இந்த ஊடகங்கள் எழுப்பும் கேள்வி ஒன்றுதான். “ஆனால், நீங்கள் ஹமாசைக் கண்டிக் கிறீர்களா?” என்பதே அந்தக் கேள்வி. இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டுகால பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை வர லாற்றை ஒரே ஒரு நாள் (அக்டோபர் 7)செய்தியோடு சுருக்கப் பார்க்கிறார்கள். வரலாற்றாளர்கள், அரசியல் பார்வை யாளர்கள் கடந்த கால வரலாற்று உண்மைகள், தரவுகளை எடுத்துக் கூறி ஊடகங்களிடம் போராடு கிறார்கள். ஆனால் பிபிசி செய்தியாளர் பியர்ஸ் மார்கன் எகிப்திய நகைச் சுவை நடிகர் பாசெம் யூசுப்பை பேட்டி கண்ட போது அவரது வேறு மாதிரியான பதில் அளிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தார். நீங்கள் ஹமாசை ஆதரிக்கிறீர்களா? என்று பிபிசி செய்தியாளர் மார்கன் கேட்ட தும், நகைச்சுவை நடிகர் இப்படிச் சொன்னார்: “ஆம். நான் ஒரு இஸ்ரேலியனாக இருந்தால் எவ்வளவு பாலஸ்தீனர்களைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேரைக் கொன்று குவிப்பேன். ஏனெனில் உலகம் அவர்களைக் கொலை செய்வதற்கு என்னை அனுமதித்துள்ளது”. இதைக் கேட்டதும் பிபிசி நிருபருக்கு அடுத்து என்ன கேட்பது என்று விழிக்க ஆரம்பித்துவிட்டார். - வைஷ்ணா ராய், பிரண்ட்லைன் ஆசிரியர் டிசம்பர் 1 இதழுக்கான அறிமுகத்தில்...