உதகை, மே 10- 125 ஆவது மலர் கண்காட்சிக்காக உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர் தொட்டிகளை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத் தில் அடுக்கி வைக்கும் பணியை அமைச் சர் கா.ராமசந்திரன் துவக்கி வைத் தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125 ஆவது மலர் கண்காட்சி மே 19 ஆம் தேதியன்று துவங்கி மே 23 ஆம் தேதியன்று வரை நடைபெற உள்ளது. இதற்காக பூங்கா வில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, பிகோனியா, ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெணுன்குலஸ் உள் ளிட்ட 325 வகையான ரகங்களில் 5.5 லட் சம் மலர் நாற்றுகள் மலர்ந்து, பூக்க துவங்கியுள்ளன. மேலும், இவ்வாண்டு நடைபெறும் மலர் கண்காட்சியின் சிறப் பம்சமாக பூங்காவில் அமைந்துள்ள இத் தாலியன் பூங்காவில் சுமார் 10 ஆயிரம் வகையான வண்ண மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகள் காண்பதற்கு குளிர்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு செய்யப் பட உள்ளது. அதேபோல் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங் கும் வண்ண மலர்களை சுற்றுலா பய ணிகளின் கண்களுக்கு விருந்தாக படைக் கும் வகையில், மலர் தொட்டிகளை மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.